Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 நவம்பர் 08 , மு.ப. 07:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.ஜே.எம்.ஹனீபா)
சாய்ந்தமருது பிரதேச மக்களுக்கான சட்ட விழிப்புணர்வு மற்றும் இலவச சட்ட சேவை ஆகியவற்றை இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு வழங்கவுள்ளதாக ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் சட்டத்தரணி எம்.ரீ.சபீர் அஹமட் தெரிவித்தார்.
கல்முனை பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்நிகழ்வு எதிர்வரும் நவம்பர் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் 12.00 மணி வரை சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இச்செயலமர்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், சிரேஷ;ட சட்டத்தரணிகளான யூ.எல். லியாகத் அலி, ஆரிப் சம்சுதீன், எம். ஷhரிக் காரியப்பர் மற்றும் எம்.ஐ.அஸீஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சட்டம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு இலவச சட்ட சேவையினை பெற்றுக்கொள்ளுமாறும் இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகம் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
25 minute ago
1 hours ago