2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

இராணுவத்தினர் முகாம் அமைப்பதற்கு எதிராக அஷ்ரப் நகரில் ஆர்ப்பாட்டம்

Super User   / 2011 நவம்பர் 08 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

தமது காணிகளில் இராணுவத்தினர் அத்துமீறி முகாம்களை அமைத்து வருவதாக குற்றம் சுமத்தி அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட அஷ்ரப் நகர் பிரதேச மக்கள் இன்று செவ்வாய்கிழமை காலை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

இதன்போது, குறித்த இராணுவத்தினரை அங்கிருந்து உடனடியாக வெளியேறும் படியும் கோரிக்கை விடுத்தனர்.

தமது குடியிருப்பு மற்றும் பயிர் செய்கை நிலங்களில் கடந்த சில நாட்களாக இராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து சிறிய ரக மினி முகாம்களை அமைத்து வருகின்றனர். இதனால் தங்களுக்கு சொந்தமான காணிகளுக்குள் தாம் - நுழைவதை இராணுவத்தினர் தடுத்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

அஷ்ரப் நகர் பகுதியிலுள்ள இரண்டு இடங்களில் இராணுவத்தினர் தற்போது குடிகொண்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த பகுதியில் இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து அங்குள்ள இராணுவ அதிகாரியிடம் கேட்டபோது,

'அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நாம் இராணுவ முகாம்களை அமைத்து வருகின்றோம். அது போன்றதொரு நடவடிக்கையே இதுவாகும்.

இப்பிரதேசத்தின் பாதுகாப்பினை பலப்படுத்தும் நோக்குடனேயே நாம் இங்கு இராணுவ முகாம்களை அமைத்துள்ளோம்.

மேலும், இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள இந்த இடமானது, அரசாங்கத்துக்கு சொந்தமானது என மாவட்ட செயலாளரால் எமக்கு அடையாளம் காட்டப்பட்டது. அதனால் தான் நாம் இங்கு நிலைகொண்டுள்ளோம்.' என்றார்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட அஷ்ரப் நகர் நகர் கிராமத்தில் சுமார் 186 குடும்பங்கள் வசிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • Akkaraipattu Thursday, 10 November 2011 03:35 AM

    @சிராஜ்....
    தம்பி சிராஜ்.... என்னால குருடனுக்கு யனைய பத்தி விளங்கபடுத்த இயலாது ...... அப்பிடிதான் உங்கட அறிவும் சிந்தனையும்...,
    இரண்டு தடவை தெளிவான சிந்தனையுடன் வாசித்து பார்க்கவும். பின்னர் சில நேரம் புரியலாம் அதன் அர்த்தம் உங்களுக்கு.
    நண்பரே மக்கள் பலமும் மந்திரி பலமும் தேவை அரசாங்கத்திடம் எதிர்ப்பை தெரிவிப்பதற்கு. இந்த 30 பேரின் குரல் பிரதேச சபைக்கு கூட கேட்காது.
    நம் மக்களிடம் பிரதேச வாதமும், பேதமும் இரிக்கின்ர வரை அரசாங்கத்திற்கு கொண்டாட்டம் தான்.

    Reply : 0       0

    saam Friday, 11 November 2011 08:24 AM

    horsse and tree both parties leaders are now with gov.....

    Reply : 0       0

    Akkaraipattu Thursday, 10 November 2011 11:46 PM

    @ Siraj....
    வடகிழக்கு பிரிக்க பட்டதை சரித்திரத்தை புரட்டிப்பார்க்கும் சகோதரரே .......
    SLMC யினர் புலிகளும் துப்பாக்கி குண்டுக்கு பயந்து வயைதிறக்க பயப்பட்ட நேரம் ....தனியே நின்று குரல் கொடுத்தவன் அந்த குதிரை படை தலைவன் மாத்திரமே .............

    Reply : 0       0

    Akkaraipattu Thursday, 10 November 2011 11:38 PM

    @அன்சார் ....
    பிரதேசவாதம் பிடித்த உங்களைப்போன்ற நண்பர்களால்தான் அக்கரைபற்று இன்று பல் துறைகளில் முன்னேறி பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டு செல்கிறது.... இறைவனின் அருளால்....
    ஆலயடிவேம்ம்பு பிரதேச சபை ...அக்கரைபற்று மாநகர சபைக்கு முதல் உருவாக்க பட்டது நண்பரே ......,
    (அக்கரைபற்று பிரதேச சபை ஆலயடிவேம்பு பிரதேச சபையில் இருந்து சுமார் 30 வருடங்களுக்கு முதல் பிரிந்தது )

    Reply : 0       0

    Akkaraipattu Thursday, 10 November 2011 11:29 PM

    @ meenavar.....
    தம்பி ஆர்ப்பாட்டத்திற்கு வராதவர்கள் என்றால்...... அவர்கள் இராணுவ முகாம் அமைப்பதற்கு ஆதரவானவர்கள் என்று அர்த்தம் அல்ல ....... (குறுகிய சிந்தனை வேண்டாம் ).
    இப்போதுள்ள நம் நாட்டின் சூழ்நிலைக்கு மிகப் பெரிய மக்கள் பலம் அவசியம் ........

    Reply : 0       0

    mbm Thursday, 10 November 2011 03:39 PM

    ஒன்னும் நடக்காது. மேலுள்ள மாதிரி உங்கட போட்டோக்கள் எல்லாம் பேப்பர்ல வரும். அவ்வளவுதான்! உங்கட போராட்டத்திற்கு கிடைக்கும் அங்கீகாரம்! இதுக்கெல்லாம் வேறுவிதமான மருந்து இருக்கு! கொஞ்சம் சிந்திங்க!

    Reply : 0       0

    ansar Thursday, 10 November 2011 07:09 AM

    அட்டளைச்சேனை என்பது ஐம்பதாயிரம் மக்கள் தொகை கொண்ட சிறு கிராமம். இருபதாயிரம் மக்கள் வாழும் மாநகரம் அல்ல .

    Reply : 0       0

    ansar Thursday, 10 November 2011 07:04 AM

    திருவாளர் அக்கரைப்பத்து சொல்வதில் எந்த தவறும் இல்லை. எமது மூன்று உஊர் மக்களும் (பாலமுனை ஒலுவில் அட்டளைச்சேனை) ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் , தைக்கநகர் தொடக்கம் கலியோடை வரை ஒரே ஊர் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். தீர்வு கிடைக்கும் வரை போராட வேண்டும். அப்பொழுது திருவாளர் அக்கடப்பத்தின் வாய் தானாகவே அடங்கும். எமது மூன்று முத்தான உஊர்களும் ஒன்றுபடுவதே அவருக்கு நாம் அளிக்கும் தகுந்த பதிலாகும் . அவர்கள் ஏற்கனேவே ஆலயடிவேம்பை இழந்து பரிதவிக்கிறார்கள்.

    Reply : 0       0

    சிறாஜ் Thursday, 10 November 2011 06:00 AM

    akkaraipattu கூடுதலாக உளறாமல் உமது குதிரைப் படைத்தலைவரிடம் போய் சொல்லி இப்பிரச்சனையை மக்களின் சார்பாக பேசச்சொல்லும் பார்ப்போம். அது ஒருக்காலும் நடக்காது ஏன்னா நாலா மடிந்து ஐந்தாக குப்புற விழ ஆயத்தமாகும் தலைவர்கள் அவர்கள்.

    Reply : 0       0

    சிறாஜ் Thursday, 10 November 2011 05:58 AM

    akkaraipattu உம்மைப்போன்ற சிலர் இருக்கு மட்டும் மக்களுக்கு சேதம்தான். ஏன்னா நீர் எல்லாம் ஓசிக்குதிரையில் போகும் ஆட்கள் ஆச்சே.
    எனக்கு நல்லா படிக்கவும் தெரியும், பகிரவும் தெரியும் ஆனால் கூட்டிக்கொடுக்க தெரியாது...

    Reply : 0       0

    meenavan Thursday, 10 November 2011 05:56 AM

    @Akkaraipattu உங்களின் எடுகோளின் அடிப்படையில், மிகுதி 29970 பேர் இராணுவ முகாம் அமைப்பதற்கு ஆதரவானவர்களா? ஆளுமை அமைச்சரிடம் கேட்டாலே அவரே மனம் திறந்து சொல்லுவார்.

    Reply : 0       0

    Akkaraipattu Thursday, 10 November 2011 04:45 AM

    @Meenava ....
    தம்பி ... அஸ்ரப் நகர் என்பது 30,000 பேரைகொண்ட அட்டளைசெனையின் ஒரு பகுதி...( So whrs tht rest 29970..???)
    அமச்ச்சரின் மகனாக இருந்தாலும் மக்கள் ஓட்டுப்போட்டால் மாத்திரமே மேயராக வரமுடியும்.
    நண்பரே மற்றவர்களின் புள்ளிகளை வாங்குவதற்கு நாம் 1um தங்கி வாழ்பவர்கள் அல்ல.

    Reply : 0       0

    meenavan Thursday, 10 November 2011 03:47 AM

    @ அக்கரைப்பற்று, அஸ்ரப் நகர் அட்டாளைச்சேனை செயலக பிரிவில் உள்ள 186 குடும்பங்கள் வசிக்கும் ஊர் என செய்தியாளர் ஆரம்ப, இறுதி வரிகளில் குறிப்பிட்ட நிலையில், என்ன வாப்பா நீங்க என்னிடம் அஸ்ரப் எங்குள்ளது என்று கேகிரியல்? நாம் வழங்கும் கொமெண்டை வைத்து கருத்தாளர்கள் புள்ளி வழங்குவதையும் கருத்தில் கொள்ளவும். குண்டான் சட்டியில் குதிரை ஓடுவதில் ஆளுமை மிக்கவர் தான் தனது வாரிசை மேயர் ஆக்கிவிட்டாரே? please. read the article properly make comments according to the article.

    Reply : 0       0

    min Tuesday, 08 November 2011 09:56 PM

    என்ன கொடும சார்! ஏழை முஸ்லிம்களின் காணியில்தானா இராணுவ முகாம் அமைக்க வேண்டும். இனத்தாரின் அமைச்சர் என்ன பண்ண போகிறார் பொறுத்திருந்து பார்போம். தலைவர் அஸ்ரப் உருவாக்கிய கிராமம் இது. யாரும் மறந்து விடதீங்க.

    Reply : 0       0

    Dilan Wednesday, 09 November 2011 09:00 PM

    தமிழர்களுக்கோ சிறுபான்மையினருக்கோ பிரச்சினை என்றால் கிண்டலாக கொமன்ஸ் போடும் கிறுக்குகள் இந்த செய்தியை பார்த்து திருந்தட்டும்.

    Reply : 0       0

    சிறாஜ் Wednesday, 09 November 2011 07:25 PM

    @அக்கறைப்பட்டு, அஷ்ரப் நகரில் இருக்கும் மக்கள் அவ்வளவுதான். லூசி போல கொமண்ட் பண்ணக்கூடாது. மக்கள் அவதிப்படும் இந்த வேளையில் இங்கு என்னமோ சொல்லி உளம்பும் உமக்கு என்ன பதில் சொல்வது..

    Reply : 0       0

    sathik Wednesday, 09 November 2011 04:53 PM

    முஸ்லிகளின் பிரதி நிதி நாங்கள்தான் என்று தம்பட்டம் அடிக்கும் கட்சி எங்கே? தலைவர் எங்கே?

    Reply : 0       0

    maazeen Wednesday, 09 November 2011 03:33 PM

    கண்டிக்கத்தக்கது.

    Reply : 0       0

    Manithan Wednesday, 09 November 2011 03:33 PM

    சரியாகச் சொன்னீர்கள் மீனவன் அவர்களே, பாராளுமன்றத்துக்கு அங்கத்தவர்களை அனுப்பும்போது இவர்கள் நமது பிரதி நிதிகள் நமது சமூகப் பிரச்சனைகளை தீர்த்துவைப்பார்கள் entru நம்பி அனுப்பி வைக்கின்றனர். ஆனால் அவர்களோ......

    Reply : 0       0

    Akkaraipattu Wednesday, 09 November 2011 06:29 AM

    @Meenava.....!
    அருமை தம்பியே .....அஸ்ரப் நகர் எங்கு உள்ளது எண்டு தெரியுமா ...அது Addalaichenayin ஒரு பகுதி (Eg-Like as Div), அந்தப்பகுதி திருவாளர் அஸ்ரப்பினால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டதால் .அது .. அஸ்ரப் நகர் என பெயர் சுட்டப்பட்டது .
    வெளங்கிட்டா வாப்பா .........,

    "அமைச்சர் ஒரு முன்னாள் வாத்தியார் ...இந்நாள் ஆளுமை மிக்க தலைவர் " ..... " The Leader who had no Title" by RS .
    Mathamatics never depend on theory thts depnd on ur Intelignt -----
    can i prove 7*13=28,

    Reply : 0       0

    meenavan Wednesday, 09 November 2011 04:54 AM

    பிரதர் akkaraipattu, மிரர் செய்தியின்படி186 குடும்பங்கள் வாழ்கின்ற ஊர். உங்கள் கருத்துப்படி அங்கத்தவர்களின் எண்ணிக்கை 30000 பேர் என்றால், சராசரி ஒரு குடும்ப அங்கத்தவர் எண்ணிக்கை 161 அப்படிதானே? உங்கட கணித வாத்தியார் அமைச்சர் தானா?

    Reply : 0       0

    wahabfais Wednesday, 09 November 2011 04:34 AM

    இதுதான் முஸ்லிமின் நிலைமை

    Reply : 0       0

    Akkaraipattu Wednesday, 09 November 2011 04:07 AM

    சிந்தியுங்கள் சகோதரர்களே .... 30000 பேர் கொண்ட ஊரில் 30 பேர் மாத்திரமே ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்கள் ........

    Reply : 0       0

    Akkaraipattu Wednesday, 09 November 2011 04:04 AM

    சகோதரர்களே இராணுவ முகாம் அமைப்பது என்பது நம் அமைச்சர்களின் தீர்மானம் அல்ல ..... இது அரசாங்கத்தின் முடிவு .......( குறுகிய சிந்தனை வேண்டாம்).
    மக்கள் பலமும் மந்திரி பலமும் தேவை இதை தடுப்பதற்கு ..........

    Reply : 0       0

    Manithan Wednesday, 09 November 2011 02:46 AM

    அமைச்சர்களின் பதவி மோகம் மாறினால்தான் இது பற்றி யோசிப்பார்கள். தடுத்து நிறுத்துவது யார்?

    Reply : 0       0

    ஓட்டமாவடி ஜெமீல் Tuesday, 08 November 2011 10:11 PM

    நாடு முழுவதையும்தான் நமது படை வீரர்கள் பிடித்து சுதந்திரமாய் வாழ வழியமைத்துவிட்டார்களே, பிறகு காணிகளுக்கு அவர்களுக்கு பஞ்சம் வரக் காரணம்தான் என்ன? எவ்வளவு அரச காணிகள் அரசாங்கத்திடம் உண்டு. மக்கள் பயிர்ச்செய்கை நிலங்களை விட்டுவிட்டு வெற்றுக் காணிகளை முகாம்களாக்கினால் மக்களுக்கும் பாதுகாப்பும் அவர்களுக்கும் நல்லதுதானே. இது யாருடைய திட்டமிடலின் தவறு?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .