Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 நவம்பர் 09 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட அஷ்ரப் நகர் பிரதேசத்தின் குறித்ததொரு பகுதியில் வசிக்கும் பொதுமக்களை உடனடியாக வெளியேறுமாறு இன்று புதன்கிழமை அரச அதிகாரிகள் உத்தரவிட்டமையினால் குறித்த பகுதி பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்குமிடையில் கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
அஷ்ரப் நகரின் குறித்த பகுதிக்கு வன பரிபாலனத்துறை அதிகாரிகள், இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலர் விஜயம் இன்று மேற்கொண்டனர்.
இதன்போது, குறித்த காணிகள் அரசாங்கத்து சொந்தமானவை என தெரிவித்த வனபரிபாலன துறை அதிகாரிகள்இ குறித்த காணிகளில் வசிப்போர் அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என உத்தரவிட்டனர். இதனையடுத்து குறித்த காணியில் வசிப்போருக்கும், அதிகாரிகளுக்குமிடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
30க்கு மேற்பட்ட குடும்பங்கள் குறித்த பகுதியில் வசிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இக்காணிகளில் தாம் பல வருடங்களாக வசித்து வருவதாகவும், இந்த காணிகளுக்கான அனுமதி பத்திரம் உள்ளதாகவும் காணியில் வசிப்போர் தெரிவித்தனர்.
இதன்போது, சில காணிகளுக்கான அனுமதி பத்திரம் தன்னால் தவறுதலாக வழங்கப்பட்டு விட்டதாக அங்கு சமூகமளித்திருந்த அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் தெரிவித்ததுடன், குறித்த அனுமதி பத்திரங்களை இரத்து செய்வதாகவும் குறிப்பிட்டார்.
இது குறித்து, உரிய காணியில் வசிக்கும் ஐ.எல். இப்றாலெப்பை என்பவர் கருத்து தெரிவிக்கையில்,
'காணிகளுக்கு தவறுதலாக அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டு விட்டன என பிரதேச செயலாளர் ஒருவர் தெரிவிப்பதானது ஏற்றுக்கொள்ள முடியாததொரு விடயமாகும்.
இந்த காணியிலிருந்து ஒருபோதும் நான் வெளியேறமாட்டேன். அப்படி என்னை வெறியேற்ற வேண்டுமாயின் எனது பிரேதத்தினை தான் வெளியே கொண்டு செல்ல வேண்டும்' என்றார்.
தாம் வசித்து வரும் மேற்படி காணிகளில் இராணுவத்தினர் முகாம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அஷ்ரப் நகர் மக்கள் நேற்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
SSS Thursday, 10 November 2011 04:07 PM
இதுமட்டுமல்ல இதற்கு மேலும் எதிர்பார்க்கலாம். கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள் உடுத்த சாரம் கூட இல்லாமல் தான் போக வேண்டி வரும். எல்லோருக்கும் ஒரு நல்ல பாடம்.
Reply : 0 0
safa Saturday, 12 November 2011 04:59 PM
யுத்த காலத்திலாவது எம்மை போன்றோருக்கு கொஞ்சம் அமைதியான சூழல் இருந்தது. ஆனால் இன்று பாருங்கள் சமாதானம் அது இருந்து என்ன லாபம்? இதை சொன்னால் இவர்கள் சமத்துவமற்ற வாதிகள் என்று பெயரெல்லாம் சொல்லுவார்கள். இன்று இவர்களுக்கு ஏற்பட்ட இதே நிலைதான் நாளை உங்களுக்கும் மறந்துவிடாதீர்கள். நமக்கு ஒட்டு போடும் உரிமை மட்டும்தான். உரிமை கொண்டாடும் தகமை கிடையவே கிடையாது.. அதிலும் நமது முஸ்லிம் தலைவர்கள் சொல்லவே வேண்டாம், அநியாயத்துக்கு ரொம்ப நல்லவர்களாக இருக்கிறார்கள்.
Reply : 0 0
vaasahan Saturday, 12 November 2011 04:21 AM
அந்த ஆள் படித்துப் படித்து சொன்னான். அற்ப சொஹத்துக்காக இரண்டு தரம் முடிசூட்டிவிட்டு நாம் இப்போ தொழிலுக்குப்போன அதிகாரிகளை குற்றம் சொல்கின்றோம். சந்தர்ப்பம் வரும்போது சொல் கேட்பதில்லை. முடிசூட்டியவர்கள் தங்கள் பங்குகளை வாங்கிக்கொண்டு ஏப்பம் விட்டுக் கொண்டிருக்க சீவனை காக்க போய் ஒட்டியவனை சாம்ப நினைக்கும் மேதாவிகள் இருக்குமட்டும் இந்த சமூகம் உருப்படும்.
Reply : 0 0
uooran Friday, 11 November 2011 04:28 PM
கல்முனைக்கு வாழ்த்துக்கூற வரும் தலைவனே! தவிசாளனே!
உங்களுக்கு வழிவிட்ட தலைவனின் பெயரைக்கொண்ட கிராமத்து மக்களாகிய நாங்கள் இப்போது வாழ்விடம் இழந்து நிட்கின்றோம்.
இரங்குவோர் யாரும் இல்லாமல் தவிக்கும் எங்களது கஷ்டத்தை, நீங்கள் கொண்டாடப்போகும் மகிழ்ச்சி பெருவிழாவில் மறந்து விடாது எங்களையும் வந்து பாருங்கள் ஐயா.
உங்களுக்காக அதிகமாக வாக்களிப்பவர்கள் நாங்கள் தான் ஐயா.
Reply : 0 0
m.z.m zafnas Friday, 11 November 2011 02:10 PM
enna saiya! thodarchiyaha odukkappaduhirom... thartal kalankalil varuhai thanta varhal enga??? pawam appavi makkal! pala aanithihal nadanthu kondirukana... ketpathatku aal illaya
Reply : 0 0
ala Friday, 11 November 2011 05:58 AM
பெயரே அஸ்ரப் நகரம் , முஸ்லிம் காங்கிரஸ் என்ன பண்ணுகிறது? நீதி எங்கே போனது? இலக்சென் காலங்களில் மக்களின் காலை பிடிக்கும் அரசியல் காக்காக்கள் இப்போது எங்கே போனார்கள்?
Reply : 0 0
kalmunaiyaan Friday, 11 November 2011 05:16 AM
சிராஜ்.... முஸ்லிம்களுக்கு ஏதிரான ஆக்கிரமிப்புகளுக்கு முஸ்லிம்களை பிரதிநிதிப்படுத்தும் கட்சியின் தலைவரிடம்தான் கேட்க்க முடியும்...... சமாதான பேச்சு வார்த்தைக்கு இவர்தானே போய் இருந்தார்......? ஏனைய அமைச்சர்கள் தலை இட்டால் அது வரவேற்கத்தக்கது.
Reply : 0 0
சிறாஜ் Friday, 11 November 2011 03:51 AM
இத்தனை கொமண்ட் பண்ணியிருப்பது யார் என்று புரியுது. ஆனால் இப்படி ஊளையிடும் நீங்கள் ஏன் பக்கத்து ஊரில் இருக்கும் அமைச்சர் அதுவும் உள்ளூராட்சி அமைச்சரிடம் இது பற்றி கேட்க வில்லை? ஒலுவில் மக்கள்தான் அஷ்ரப் நகரில் இருக்கிறார்கள். குதிரைக்காறருக்குத்தானே வாக்கும் அளித்தார்கள்! அப்படி இருக்கும் போது ஏன் அந்த அமைச்சர் போய் இதனை கேட்கவில்லை? இது எந்த வகையில் நியாயம் என்று சொல்லுங்க பார்ப்போம்.
எல்லாத்துக்கும் ஹக்கீமை இழுத்தால்தான் சிலருக்கு சாப்பாடே செமிக்கும் போல இருக்கு.
Reply : 0 0
muhamed firdous Friday, 11 November 2011 02:17 AM
ஆக்கிரமிப்புக்கு வக்காலத்து வாங்கி கொடுக்கும் அதிகாரிகளே இது முஸ்லிம் மக்களுக்கு செய்யும் அநியாயமல்லவா?
Reply : 0 0
mrishan Friday, 11 November 2011 01:55 AM
ilankai, nam natu musligalku eppotu vidivu?
Reply : 0 0
ummpa Thursday, 10 November 2011 09:40 PM
இதக்கு ஒரேவழி வீதிக்கு இறங்குவதை தவிர வேறு மார்க்கம் இருப்பதாக எனக்கு புரியவில்லை.
Reply : 0 0
jaleel Nintavur Thursday, 10 November 2011 05:26 PM
மக்கள் விருப்பத்தோடு தானே தேர்தல் வந்ததும் வரிசையில் நின்று வாக்களிக்கின்றார்கள். அந்த மக்கள் உணர்ந்து கொள்ளுவதை விட்டு விட்டு , அதிபர்களை எப்படி மக்கள் குறை கூறுவது இதில் மக்களின் தாவு 1௦௦%.
Reply : 0 0
hameed Thursday, 10 November 2011 01:20 AM
என்ன அமைச்சர்கள் இந்தே விடயத்தில் அமைதியாக இருக்கிறீர்கள் ... விஷயம் தெரியாதோ அல்லது ஊரில் இல்லையா ... அஷ்ரப் நகருக்கே இந்த நிலையா?
Reply : 0 0
ஹில்மு Thursday, 10 November 2011 04:06 PM
யாரு... அமைச்சர் எண்டு சொல்லவாறியள்...? எமது சமூகத்துகாக இருந்த ஒரு அமைச்சர் வபாத்தாகிட்டாருங்க...
Reply : 0 0
mbm Thursday, 10 November 2011 03:21 PM
இதை தட்டிக் கேட்க இனியும் ஒரு நபர் வரப்போவதில்லை. தெரிந்தோ தெரியாமலோ முஸ்லிம்கள் உலகலாவ ரீதியிலும் நாடளாவிய ரீதியிலும் ஒடுக்கப்பட்டு கொண்டு வருகின்றனர்! முஸ்லிம் அரசியல்வாதிகளே... உங்களை பேரும் புகழுடனும் வாழ வைத்துகொண்டிருக்கும் முஸ்லிம்கள் ஏமாளிகளா? நன்றி என்ற சொல்லுக்கு மரியாதை கொடுத்து முஸ்லிம்களுடைய நிலத்தை மீட்டு கொடுங்கள்!
Reply : 0 0
hussain Thursday, 10 November 2011 02:32 PM
நீதி அமைச்சரே அரசாங்கத்துக்கு ஐடியா குடுங்க சார். முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் பாவம். அதுவும் ஒலுவில் ,பாலமுனை, அட்டாளைச்சேனை தான் நூறுவீதம் முஸ்லிம் காங்கிரஸ் சார்.
Reply : 0 0
kalmunaiyaan Thursday, 10 November 2011 12:12 PM
ஹக்கீம் அவர்களுக்கு பகிரங்க கடிதம்.....
இந்த அஷ்ரப் நகரினில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறச் சொல்லுவது பற்றி உடனடியாக உங்கள் நிலைப்பாடு தெரிந்தாக வேண்டும்..
இந்த மக்கள் அவ்வாறு மிகக்குறுகிய காலத்தினில், அவர்களது காணி இல் இருந்து வெளியேறி ஏங்கு செல்வது...? இதன் உல் நோக்கம் ஏன்ன?? யார் இந்த அம்பினை ஏய்தவர்?
DS தவறுதலாக அனுமதி பத்திரம் வழங்கி இருந்தால், இந்த DS இணை பதவி நீக்கம் (Dismiss) செய்வதில் இன்னும் ஏன் தாமதம்.....??
உங்களது உடனடி பதில் அதிவேகமான நடவடிக்கை மூலம் தெரிந்தாக வேணும்.
Reply : 0 0
kalmunaiyaan Thursday, 10 November 2011 11:44 AM
இதக்கு உடனடியாக ஹக்கீம் தலை இட்டு தீர்வு காணவேண்டும்.... இது மனித உரிமை மீறலாகும்.... இந்த அதிகாரி தவறுதலாக பத்திரம் வழங்கினால் அதக்கு இந்த அதிகாரியை பதவி நீக்கம் செய்வதை விட்டுவிட்டு ஏன் மக்களை மிரட்டுகிறீர்கள்?
Reply : 0 0
Mohamed Nazeem Thursday, 10 November 2011 09:01 AM
Mr. Nazeer you representative of Government and servent for Residents. How could young say its a mistake? If that so you appointment also a bigger mistake by Government. You says Ashraf Nagar land belong to Government, if that so people living in that land is not CITIZEN of Sri Lanka. Late Ashraf declared as "Ashraf Nagar" where was your Land commission and department. Are they sleeping. If that land havent declared by government how could Late Ashraf registered that village as Ashraf Nagar?
Reply : 0 0
sathik Thursday, 10 November 2011 06:13 AM
அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவோம், முஸ்லிம்களுக்கு எதிராக எது வந்தாலும் அரசாங்கத்துக்கு எதிராக செயல்படுவோம் என்று வாய் கிழிய தேர்தல் காலங்களில் பிரசாரம் செய்த தேசிய தலைவர் எங்கே???
Reply : 0 0
jamsith Thursday, 10 November 2011 04:22 AM
என்ன கொடுமை இது? அநாதைச் சமூகமாக மாறும் மக்கள் ............
Reply : 0 0
Akkaraipattu Thursday, 10 November 2011 04:03 AM
எந்த அமைச்சர் .....???
எந்த ஒரு சிறுபான்மை இன அமைச்சர்களின் கருத்தும் எடுபடாது இப்போது.
சில மக்கள் ஓட்டுப் போடுவார்கள் சில அமைச்சர்களுக்கு. ஆனால் பிரச்சினை வந்தால் குற்றம் சுமத்துவார்கள் சில அமைச்சர்களை .....
Reply : 0 0
meenavan Thursday, 10 November 2011 03:57 AM
நல்ல காலம், காணி அனுமதி பத்திரம் தவறுதலாக வழங்கப்பட்டது என்பது போல தனது D.S. பதவியும் தவறுதலாக தனக்கு வழங்கப்பட்டது என்று சொல்லவில்லை. பாவம் அரச அதிகாரி.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
17 minute ago
1 hours ago