2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

மண்ணெண்ணெய் அடுப்பு வெடித்ததில் தீக்காயங்களுக்கு உள்ளான பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Kogilavani   / 2011 நவம்பர் 10 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)
மண்ணெண்ணெய் அடுப்பு வெடித்ததில் பலத்த தீக்காயங்களுக்குள்ளாகிய நிலையில் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி நேற்று புதன்கிழமை மாலை உயிரிழந்துள்ளார்.  

சம்மாந்துறை இரண்டாம் பிரிவு, ஈஸா லேன் பிரதேசத்தினைச் சேர்ந்த ரமழான் சித்தி சனூபா (வயது-38) எனும் மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சமையல் வேலையில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் மண்ணெண்ணெய் அடுப்பு வெடித்தினால் குறித்த பெண்ணின் உடம்பில் 85 வீதமான பகுதி கடும் தீக்காயங்களுக்குள்ளாகியது.

இந்நிலையில் மேற்படி பெண் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிஸார் மேற் கொண்டுவருகின்றனர்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .