2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

அஷ்ரப் நகர் மக்களை நினைத்தாற்போல் வெளியேற்ற முடியாது; பிரச்சினைக்கு விரைவில் தீர்வு என்கிறார் ஹக்கீம

Menaka Mookandi   / 2011 நவம்பர் 12 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

மு.கா. தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீமை – அஷ்ரப் நகர் மக்கள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு சந்தித்து தமது பிரச்சினைகள் குறித்து பேசியதோடு, தமக்கு உடனடியானதொரு தீர்வினைப் பெற்றுத்தருமாறும் வலியுறுத்தினர். இந்தச் சந்திப்பு அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மு.காங்கிரஸின் செயலாளருமான ஹசன் அலியின் நிந்தவூர் இல்லத்தில் இடம்பெற்றது.

இதன்போது, அட்டாளைச்சேனைப் பிரதேச செயலாளர் எம்.எம்.நசீர், உதவிப் பிரதேச செயலாளர் மற்றும் அஷ்ரப் நகரின் கிராமசேவை உத்தியோகத்தர்கள் அங்கு அழைக்கப்பட்டிருந்தமைக்கு இணங்க வருகை தந்திருந்தனர்.

அஷ்ரப் நகரின் சர்ச்சைக்குரிய காணிச் சொந்தக்காரர்கள் இதன்போது அமைச்சர் ஹக்கீமிடம் தமது பிரச்சினைகள் குறித்து விளக்கமளித்ததோடு, தமது நிலங்களுக்குள் செல்வதை இராணுவத்தினர் தடுப்பதாகவூம் கூறினர். 

அங்கு வந்திருந்த அஷ்ரப்நகர் வாசி ஒருவர் அமைச்சரிடம் கூறுகையில், “வனபரிபாலனத் துறையினருக்குச் சொந்தமான அரச காணியில் நாங்கள் அத்து மீறி குடியேறியூள்ளதாகத் தெரிவித்து, ஏற்கனவே – எங்களுக்கெதிராக நீதிமன்றத்தில் ஒரு வழங்கினை வனபரிபாலனத்துறையினர் தாக்கல் செய்திருந்தனர். ஆனால்,அந்த வழங்கின் தீர்ப்பு எங்களுக்குச் சாதகமாக அமைந்தது. 

எங்களிடமிருந்த காணி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் காணி தொடர்பான சட்டபூர்வ ஆவணங்கள் அனைத்தையும் கவனத்திற்கொண்ட நீதிமன்றம், அந்தக் காணியில் எங்களைத் தொடர்ந்தும் குடியிருக்க அனுமதித்தது. இந்த நிலையில்தான் - நீதிமன்றத்தின் தீர்ப்பினையும் பொருட்படுத்தாது. வனபரிபாலனத்துறையினர் மீண்டும் மீண்டும் வந்துயு எங்கள் காணிகளிலிருந்து வெளியேறுமாறு எங்களைக் கஷ்டப்படுத்துகின்றனர்” என்றார்.

இன்னும் சிலரின் காணிகள் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் - இந்த நிலையிலேயே – குறித்த காணிகளிலிருந்து தம்மை வெளியேறுமாறு வனபரிபாலனத்துறையினர் வற்புறுத்துவதாகவும், தங்கள் காணிகளுக்குள் செல்வதை ராணுவத்தினர் தடுப்பதாகவும் - அமைச்சரிடம் அஷ்ரப்நகர் மக்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, அட்டாளைச்சேனைப் பிரதேச செயலாளர் எம்.எம்.நசீர் - வனபரிபாலனத் துறையினருடன் சேர்ந்து கொண்டு மக்களின் நலனைப் புறக்கணிக்கும் வகையில் நடந்து கொள்வதாகவூம், குறித்த காணிகளுக்கு அட்டாளைச்சேனைப் பிரதேச செயலாளர் என்கிற வகையில், அவர் வழங்கிய அனுமதிப்பத்திரங்களை – தவறுதலாக தான் வழங்கி விட்டதாகக் கூறி, அந்த அனுமதிப் பத்திரங்களை ரத்துச் செய்வதாக அவரே அறிவித்தமையானது சட்டத்துக்கும், சமூகத்துக்கும் எதிரான செயற்பாடுகள் எனவூம் - மக்கள் இதன்போது குற்றம் சுமத்தினர்.

விடயங்களைச் செவிமடுத்த அமைச்சர் ஹக்கீம், “இந்தப் பிரச்சினை மிக நீண்ட காலங்களைக் கொண்டது எனவூம், இது விடயத்தில் உரியவர்களுடன் பேசி தீர்வூ காண்பதாகவூம்” மக்களிடம் கூறினார்.

அதேவேளை, குறித்த காணிகளில் குடியிருக்கும் மக்கள் அங்கு தொடர்ந்து இருக்கும் வகையில் நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பொன்றினை வழங்கியூள்ள நிலையிலும்இ மேலும் சில காணிகள் தொடர்பில் வழக்குகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் தருணத்திலும் - அங்குள்ள மக்களை நினைத்தாற்போல் வெளியேற்ற முடியாது” எனவூம் ஹக்கீம் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின்போது, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ்,  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.ஏ. அப்துல் மஜீத், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல்.எம். நசீர்,  உபதவிசாளர் அன்ஸில், அக்கரைப்பற்று மாநகரசபையின் எதிரணித் தலைவர் அஷ்ஷேய்க் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி, அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எல். முனாஸ், என்.எல். யாஸிர் ஐமன் உள்ளிட்ட பலர் வருகை தந்திருந்தனர்.


You May Also Like

  Comments - 0

  • muja Sunday, 13 November 2011 12:47 AM

    அஷ்ரப் நகர மக்களே இந்த பிரச்சினையை அமைச்சர் அதாவுல்லாவிடம் பேசி பாருங்க நிச்சயம் நல்ல ஒரு தீர்ப்பு கிடைக்கும்.! இன்ஷா அல்லாஹ்.

    Reply : 0       0

    safa Monday, 14 November 2011 05:18 PM

    நமது சகோதர்கள் சொல்லுகிறார்கள் எதுக்கெடுத்தாலும் குறை கூறிக்கொண்டே இருக்கிறோமாம்.... ரொம்ப நல்ல விஷயம் எங்களுக்கு மட்டும் யாரையாவது குறை கூறவேண்டும் என்று ஆசையா...??? நீங்க பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பொதுமக்களுக்கு சேவை செய்ய உள்ள ஒரு சேவையாளன்.. அதை சரியாய் செய்தால் யார் குறை சொல்வார்கள்?

    Reply : 0       0

    ஹில்மு Monday, 14 November 2011 01:53 AM

    கேட்டியயே... நம்மட நிலைமைய... பில்டப் காட்டுறதுக்கு வந்திருக்காரு மன்னவரு. இன்னொண்டு தெரியுமா கிளியள்? கிரீஸ் மனிசன்ட பிரச்சினைக்க இப்பிடித்தான் வந்தார் போனார், எல்லாம் மாயமாச்சு. அநியாயமா ஒரு உசுரு போச்சு...

    Reply : 0       0

    சிறாஜ் Monday, 14 November 2011 01:05 AM

    அமைச்சர் அதாவுல்லா இதுவரை வாய் திறக்காமல் இருப்பது ஏன் டிசிபி சேர்மன் என்று சொல்லிக்கொண்டு கொமிசனுக்கு மட்டும் வரும் இந்த அமைச்சர் ஏன் இந்த அஷ்ரப் நகர் மக்களின் பிரச்சனையில் தலையிடாமல் இருக்கிறார்?

    Reply : 0       0

    sifan Monday, 14 November 2011 12:26 AM

    தலைவர் ஹக்கீம் முகாவுக்கு தலைவர் ஆனதிலிருந்து எதுவுமே சாதித்த வரலாறு இதுவரை இல்லை. இனிமேல .........

    Reply : 0       0

    அதிரடி Sunday, 13 November 2011 07:20 PM

    அதுக்குள்ளையும் சண்ட அதவுல்லவா ஹகீமா என்று. நாம இவளவுதான் பிரச்சினைய யாருக்குட்ட சொல்லுறது என்று முடிவு எடுக்குறதுகுள்ள பிரச்சின ஏற்பட்டவன் நிலைமை அம்பேல்தான்... இதுதான் முஸ்லிம்களின் காலம் காலமாக நிலவும் நிலைமை... ஆனா மற்ற மக்களை பாருங்க தமிழன் என்றால் அவன் இயக்கமே உருவாக்கி தன் உரிமையை கேட்பான். அதேபோல் சிங்கள மக்கள் சொல்லவே வேண்டாம், ஆனால் நாம் மட்டும் இஸ்லாம் எமக்கு சொன்னதை அவர்கள் எடுத்து நடக்கிறார்கள். ஆனால் நாம் எவன் எக்கேடு கேட்டல் நமக்கென்ன என்று ஹாயா இருக்கிறோம்.

    Reply : 0       0

    Kalla Uthuman Sunday, 13 November 2011 06:03 PM

    ரொம்ப தமாசா இருக்கு, ஹீ ஹி ஹி .........

    Reply : 0       0

    addalaichenai urran Sunday, 13 November 2011 12:48 PM

    இதில் மின்ஸ்டர் அதாவுல்லாவின் நிலை என்ன ?

    Reply : 0       0

    min Sunday, 13 November 2011 06:27 AM

    யாரு அப்பா அது!! அமைச்சர் அதாவுல்லாவிடம் பேச சொல்லுறது? என்ன இது அவருக்கு தெரியாதா? ஒட்டு கேட்டு வீடு வீடா வருவாங்க இப்போ என்னா? ஓட்டு போட்டது இதுக்குத்தானா இவங்கதான மக்கள் பிரதிநிதி நல்ல இருக்குப்பா. பாதிக்கப்பட்ட மக்களை உங்களுடைய குடும்பமாக நினைத்து பேசுங்க அப்பா இங்க!

    Reply : 0       0

    ullooran Sunday, 13 November 2011 04:53 AM

    இந்த அமைச்சர்கள் யாரிடம் போய் சொல்வதென்று தெரியாமல் அலைகிறார்கள் போல! மேலிடத்திற்குப் போனால் அமைச்சுப் பதவியும் போய்விடுமோ என்ற பயமாக்கும்.

    Reply : 0       0

    AKKARAIPATTU Sunday, 13 November 2011 04:44 AM

    பிரச்சினை நடந்த இடத்திற்கு உடனடியாக வருவதில் நீங்கள் மஹா வல்லவர் ... ஆனால் அதற்குரிய தீர்வை காரியத்தில் செய்து காட்டுவதில் நீங்கள் மகா ......

    Reply : 0       0

    Common Sunday, 13 November 2011 04:39 AM

    அமைச்சரே ...நீங்கள் இப்படிதான் பொத்துவிலில் நடந்த கொலைக்கும் வாக்குச் சொன்னீர்கள் .......இ அதன் பிறகு உங்களை அந்த பக்கம் காணவே இல்லை தலைவரே ......

    Reply : 0       0

    fazil Sunday, 13 November 2011 03:21 AM

    இந்த விடயம் அதாவுல்லாஹ் அவர்களுக்கு தெரியாதா? அவருக்கும் அஷ்ரப் நகர் மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உண்டு.

    Reply : 0       0

    muhamed firdous Sunday, 13 November 2011 03:21 AM

    அதாவுல்லாவாக இருந்தாலும் சரி, ஹக்கீமாக இருந்தாலும் சரி, இது எங்கள் மக்கள் பிரச்சினை. இந்த விடயத்தில் கட்சி பேதங்களை மறந்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேசி உடனடி தீர்வு காணாவிட்டால் நீங்கள் மினிஸ்டராக இருந்து பயனில்லயப்பா ..... இமீடியட்டா எக்சன் எடுங்க......

    Reply : 0       0

    மீசான் Saturday, 12 November 2011 04:11 PM

    வோட்டு கேட்ட அரசியல் கூட்டம் இப்ப ஒலுவில் பிரசசினை பற்றி பேச நிந்தவூர் வரசொல்லுது .... அவ்விடத்திலிருந்து ஒலுவில் சென்று பாக்கிறதெண்டா இரெண்டு கட்சிகளின் தலைவர்களான அமைச்சர்களுக்கு ஹெலிகோப்ட்டர் வேணுமாக்கும் ....

    Reply : 0       0

    meenavan Saturday, 12 November 2011 10:12 PM

    நீதி அமைச்சரே இது விடயத்தில் அமைச்சர் அதாவுடனும் கலந்தாலோசியுங்கள். இல்லாவிடில் சுனாமி நுரைச்சோலை வீடமைப்பு திட்டத்திற்கு ஏற்பட்ட நிலை ஏற்படலாம். மர்ஹூம் தலைவரின் பெயர் கொண்ட ஊர் என்பதனால் அரசியல் அரிச்சுவடியை கற்று தந்த அவருக்கு நீங்கள் செய்யும் கைமாறும் கூட, நீதி அமைச்சரும் உள்ளுராச்சி, மாகான அமைச்சரும் உங்கள் இருவருக்குமுரிய சவாலாக ஏற்று அஸ்ரப் நகர மக்களுக்கு தீர்வினை பெற்று கொடுங்கள்.

    Reply : 0       0

    min Saturday, 12 November 2011 09:58 PM

    ஊறான் அவர்களே!! நல்ல கருத்து இப்போதான் பொதுவாக பேசுறாங்க. முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் இதமாதிரி பிரச்சினை வரும்போது எல்லோரும் ஒன்றாக இணைந்து அரசிடம் பேச வேண்டும். அப்போதுதான் சரியானதொரு முடிவு கிடைக்கும்! ஒரு கையால் அடித்தால் சத்தம் வராது பல கைகள் சேர வேண்டும்.

    Reply : 0       0

    ullooran Saturday, 12 November 2011 09:00 PM

    முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களே..!
    உங்களிடம் வேண்டிக்கொள்வது ...! உங்களுக்கு மக்கள் வோட்டு ப்போடுவது நீங்கள் பாராளுமன்ற கதிரைகளை சூடாக்குவதட்கோ அல்லது நீங்கள் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கோ அல்ல. மாறாக மக்களுக்கும் சேவை செய்வதற்கும் இவ்வாறான பிரச்சினைகள் வரும்போது இதற்காக குரல்கொடுப்பதற்காக வேண்டியுமே! இது தெரியாத உங்களுக்கு அரசியல் தேவைதானா...!

    Reply : 0       0

    min Saturday, 12 November 2011 08:47 PM

    ஊறான். ஐயோ கிளம்பிட்டாங்கையா, கிளம்பிட்டாங்க. இப்படி மற்ற அமைச்சர உசுப்பி விடாம முதல்ல உங்களுடைய அமைச்சருக்கு உசுப்பேதுங்க.......... நாங்களும் பார்த்துக்கிருக்கம் ஓகே வா ...

    Reply : 0       0

    vaasahan Saturday, 12 November 2011 08:44 PM

    நீதி அமைச்சரை நோக்கி விரல் நீட்ட நல்ல சந்தர்ப்பம் எண்டு நினைக்கிற ஆக்கள் ஒங்கட அமைச்சர்மார் தேர்தல் காலங்களில் சொன்னத நினச்சுப்பருங்க ஒங்களுக்கு மனச் சாட்சி இருந்தா. இது எல்லாம் நடக்கும் எண்டு அந்த ஆள் சொல்லல்லியா. ஒங்கட பக்கட்கல நிரப்ப வாக்களிச்சு பதவியக்கொண்டு சமூகத்த நீங்க விக்குறத நிறுத்த ஏலாம போக, சாதகமாகப் போய் கதைச்சி பாப்பம் எண்டு அந்த ஆள் தல குனிஞ்சு போறது மனச்சாட்சி உள்ள மக்களுக்கு விளங்கும். ஒழுப்பம் இந்த ஆளுக்கிட்ட பவர் வந்திச்சு.. கருக நீங்க முன்ன வந்து ரெக்கோர்ட மாத்துவிங்க.

    Reply : 0       0

    amaan Saturday, 12 November 2011 08:22 PM

    வழமை போல இந்த கேஸையும் நிசாம் காரியப்பர்ட குடுங்க சார்... அவரு கோட்டுல பாத்துக்குவாரு.

    Reply : 0       0

    ullooran Saturday, 12 November 2011 08:01 PM

    நீதி அமைச்சர் அவர்களே ! சமுகத்திற்காக உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாவிட்டால் உங்களுக்கு ஒரு அமைச்சுப்பதவி எதற்கு....! இன்னும் தாமதம் ஏன் ............?
    முஸ்லிம் சமூகத்திற்கு நீங்கள் எதைச் சொல்லப் போகிறீர்கள் ....?
    இதுவரை காலமும் நீங்கள் வகித்த அமைச்சுப்பதவிகளைக்கொண்டு குரிப்பாக கிழக்கு மாகாணத்திலே உங்களால் செய்ய முடிந்தது என்ன .......?

    Reply : 0       0

    min Saturday, 12 November 2011 07:45 PM

    வரவேற்கத்தக்க விடயம். தலைவர் நீங்களாச்சும் இதைப்பற்றி இப்படி ஒரு வார்த்தை சொல்லி இருக்கிங்களே, மற்ற கட்சி தலைவர்கள் என்ன செய்றாங்க என்று பார்ப்போம்.

    Reply : 0       0

    uwais Saturday, 12 November 2011 07:08 PM

    நல்ல தலைவர் இவர் அரசாங்கத்தின் கைப்பிள்ளை.

    Reply : 0       0

    ali Saturday, 12 November 2011 07:01 PM

    செய்வார் செய்வார் பாத்துக்கு இருங்கோ.

    Reply : 0       0

    mbm Saturday, 12 November 2011 06:50 PM

    நீதி அமைச்சரே.. உங்களிடம் நீதி கேட்டு வந்திருக்கும் எம்மக்களை ஏமாற்றிவிடாதீர்கள்! பாவம் ஜனங்க. பேசி பேசி காலம் தாழ்த்தாமல் உடனடி தீர்வு கிடைக்க வகை செய்ய வேண்டும். எதிர்வரும் மாகான சபைத் தேர்தலில் அந்த மக்களும் வேண்டும் உங்களுக்கு... புரிந்துகொண்டால் சரி!

    Reply : 0       0

    UMMPA Saturday, 12 November 2011 05:14 PM

    தலைவர் உங்களிடம் சொன்னால் போதது உடன் போலீஸ் மா அதிபருக்கு அறிவித்துமக்களை அச்சுறுத்தப்படுவதை நிறுத்தவேண்டும் இதுதான் உடனடித்தேவை !

    Reply : 0       0

    KamalSa Saturday, 12 November 2011 04:51 PM

    இருந்துதான் பார்போம் நீதி அமைச்சரால் பாதிக்கபட்ட மக்களுக்கு நீதி கிடைக்குமா என்று ?
    எனக்கு தெரிந்த அளவுக்கு இந்த பிரச்னை பெரிதாக வெளியே கொண்டு வந்தாலும் நாம் எதிர்பர்கின்ற அம்மக்கள் அங்கேயே இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு பாதிப்பு ஏற்படும் அதே போல் ஒன்றும் செய்யாமல் இருந்தாலும் முடிவு அம்மக்களுக்கு பாதிப்பாகவே அமையும் எனவே நீதி அமைச்சர் தனது அதிகாரங்களை பயன்படுத்தி காதோடு காதாக சத்தமின்றி செய்யவேண்டிய விடயமிது (அமைச்சர் அதாவுல்லா அக்கரைபற்று பிரதேச சபையை மாநகர சபையாக மாற்றியது மாதிரி)

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .