Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 நவம்பர் 12 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் முதலமைச்சரை பெறுவதே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அடுத்த இலக்கு என அக்கட்சியின் தவிசாளரும் உள்நாட்டு வர்த்தக மற்றும் கூட்டுறவு பிரதி அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
கல்முனை மாநகர மேயர் மீராசாகிப் சிராஸுக்கு சாய்ந்தமருது மக்களினால் வரவேற்பளிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் உரையாற்றும் போதே பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
முஸ்லிம்களுக்கான தனி அலகை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இலக்கு வைத்திருந்தது. எனினும் வடக்கு மற்றும் கிழக்கு என இரண்டாக பிரிக்கப்பட்டதையடுத்து முஸ்லிம் தனியலகு கிழக்கிற்குள் சுருங்கிப் போனது.
இதனால் தனியலகு பெறுவது சாத்தியமற்றதாகி போனாலும் கிழக்கு மாகாணத்துக்கான முஸ்லிம் முதலமைச்சரை பெறுவதையே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அடுத்த கட்ட இலக்காக கொண்டுள்ளது. அதற்காக நாம் பிரதேச வாதங்களை தூக்கியெறிந்து விட்டு அனைவரும் ஒன்று படவேண்டும். மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் கனவை நாம் நிறைவேற்ற வேண்டும்.
மறைந்த தலைவர் அஷ்ரப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸே கிழக்கு மாகாணத்துக்கான முதலமைச்சரை பெறவேண்டும் என கனவு கண்டவர். அவரின் கனவை நனவாக்க நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பங்காளி கட்சியல்ல. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தின் கூட்டாளி கட்சியாகும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் படுதோல்வியடைந்த வரலாறுள்ளது. அதேபோன்று காட்டிக்கொடுப்புக்களுக்கும் கழுத்தறுப்புக்களுக்கும் நயவஞ்சகத்தனத்துக்கும் மத்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெற்றிகளையும் கண்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மிக மோசமாக படு தோல்வியடையடைந்த இடமே பிரதேசவாதமாகும். மறைந்த தலைவர் அஷ்ரப் இந்த பிரதேசவாதத்திற்கு எதிராக மிகவும் அச்சப்பட்டார்.
1989ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதலாவது நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தது. இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு அம்பாறையில் மூன்று நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்கும் என மறைந்த தலைவர் நினைத்தார்.
ஆனால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரே அம்பாறை மாவட்டத்தில் கிடைக்கப் பெற்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஒரு நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைத்தது. குறித்த தேர்தல் முடிவடைந்ததையடுத்து அம்பாறை மாவட்டத்தில் பிரதேச வாதம் உருவாகிவிடுமோ என மறைந்த தலைவர் கூடுதலாக அச்சப்பட்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மூன்று முஸ்லிம் பெரிய பிரதேசங்களான காத்தான்குடி, ஏறாவூர் மற்றும் ஓட்டமாவடி ஆகிய பிரதேசங்களை இணைத்து பிரதேசவாதத்திற்கு எதிராக மிக பிரமாண்டமான கனவான் ஒப்பந்தமொன்று மறைந்த தலைவரினால் செய்துவைக்கப்பட்டது. ஆனால் அந்த ஒப்பந்தம் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.
கல்முனை மாநகர சபை தேர்தலில் இதே பிரதேசவாதம் அரங்கேறியது. பிரதேசவாதம் உடைக்கப்பட வேண்டும். நாம் அழிக்க வேண்டிய முக்கியமான விடயம் பிரதேசவாதமாகும். இந்த கல்முனை மாநகர மேயர் பதவி என்பது சிராஸுக்கான மேயர் பதவியல்ல. நபருக்கான மேயர் பதவி என்றிருந்தால் அது சட்டத்தரணி நிசாம் காரியப்பருக்கே வழங்கப்பட்டிருக்கும்.
கடையடைப்பு செய்து, ஹர்தால் போட்டு ஊருக்குள் அமைதியின்மையை ஏற்படுத்தி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிடம் பதவிகளை பெற்றுக்கொள்ள முடியாது. இவைகளுக்கெல்லாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பயப்படவும்மாட்டாது.
கல்முனை மாநகர மேயர் பதவியை கல்முனை ஏற்னவே சுகித்துள்ளது. மருதமுனையும் மேயர் பதவியை அனுபவித்துள்ளது. கல்முனைக்கு ஏற்கனவே ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் ஒரு மாகாண சபை உறுப்பினரும் உள்ளனர்.ஏற்கனவே சாய்ந்தமருதுக்கு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொடுத்துள்ளது. அதில் ஒருவருக்கு பிரதியமைச்சர் பதவியையும் கொடுத்தது.
ஆனால், கல்முனை மாநகர மேயர் பதவி இதுவரை சாய்ந்தமருதுக்கு கிடைக்கவில்லை என்ற ஒரு ஏக்கம் சாய்ந்தமருதுக்கு இருந்தது. இவற்றையெல்லாம் வைத்து தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடுமையாக ஆலோசனை செய்தே சாய்ந்தமருதுக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளது.
மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிராஸ், கல்முனை மாநகர சபைக்குட்பட்ட அனைத்து பிரதேச மக்களின் உள்ளங்களிலும் இடம் பிடித்து மேயராகவும் புதல்வராகவும் திகழ வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.மஜீட், கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாகிப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். (படங்கள்:எஸ்.எம்.எம்.ரம்ஸான்)
hameed Sunday, 13 November 2011 05:01 AM
இவர்களுக்குள்ளே ஒற்றுமை இல்லை. இவர்கள் மக்களை ஒற்றுமையாக இருக்க சொல்லுகிறார்கள்.
Reply : 0 0
razmy Sunday, 11 December 2011 03:11 AM
நிச்சயம் அலி சாகிர் தான் முதலமைச்சர், அல்லது சுகாதார அமைச்சர் சுபைர் தான் சத்தியம் சத்தியம்
Reply : 0 0
mohamed Thursday, 17 November 2011 09:03 AM
பிரதேசவாதம் ...... கேட்கிறவன் கேனயன் எண்டா எ பிளேன் ஓட்டுமாம்.!!!! இவரு எலக்சன் கேட்கிறப்போ பேசுவாருங்க பேச்சு....
Reply : 0 0
uooran Monday, 14 November 2011 05:58 PM
இந்தக் கூட்டத்தில் தலைவன் ஆற்றிய உரை உண்மையான முஸ்லீம் காங்கிரஸ்காரர்களை சற்று யோசிக்க வைத்திருக்கும். இங்கு நம்மட தம்பிக் கிளியப் பற்றியும் தலைமகன் விட்ட பிழையையும் முதலமைச்சர் ஆசைக்கு ஆப்பும் பற்றி கருத்துரைத்தார்.
Reply : 0 0
ummpa Monday, 14 November 2011 02:51 PM
முதலமைச்சர்! கல்முனையில் என்ன நடந்ததோ அதுதான் பின்பற்றவேண்டும் . யார் கூடுதல் விருப்பு வாக்கு எடுக்கிறாரோ அவர் தான் முதலமைச்சர் ? வசீர் உங்களுக்கு விருப்புவாக்கு எப்படி?
Reply : 0 0
m jaleel kwt Monday, 14 November 2011 01:31 AM
நீங்கள் திருந்த மாட்டீர்கள் எதற்கு எடுத்தாலும் குறை சொல்வது. அதை முதலில் விடவும்.
Reply : 0 0
Thariq Niyas Monday, 14 November 2011 01:02 AM
முஸ்லிம்களின் ஒற்றுமையை அழிக்கும் பிரதேச வாதத்துக்கு முற்றுப் புள்ளி வையுங்கள். பிரதேச வாதத்தை தூண்டும் கிருமிகளை கட்சிக்குள்ளிருந்து கிள்ளி எறியுங்கள்... அப்போதுதான் நினைத்ததை சாதிக்க முடியும்.
Reply : 0 0
sifan Monday, 14 November 2011 12:13 AM
பசீர் சார், பிரதேச வாதம் பேசி கடந்த தேர்தலில் வாதத்தை ஆரம்பித்ததே நீங்க தான் சார்.
Reply : 0 0
manithan Sunday, 13 November 2011 11:41 PM
எவ்வளவு காலத்துக்குத்தான் நீங்கள் ஏமாறப் போறீங்க?
Reply : 0 0
safa Sunday, 13 November 2011 07:04 PM
நாம இன்னும் மாறவில்லையே தோழர்களே.... அவர்களும் அரசியல் எப்போ ஆரம்பித்ததோ அன்றிலிருந்து இன்றுவரை அரசியல் மேடை போடுகிறார்கள். நாமும் அதே பல்லவிதான். போகிறோம், கேட்கிறோம், வாரோம் ... இந்த நவீன காலத்திலும் கூட இன்னும் விழிப்புணர்ச்சி இல்லையே.. அதே மேடை அதே பேச்சு அதே ஏமாந்த மக்கள் ஆனால் ஓன்று மட்டும் மாற்றம் அது அரசியல்வாதிகள்... நாம் என்றைக்கும் இப்படித்தான் நமக்கு பசிக்கு சாப்பாடு கிடைக்குதா அதோட சரி. மற்றவன் செத்தாலும் சரி, வாழ்ந்தாலும் சரி.. நியாயமான கோரிக்கை Keep it up….
Reply : 0 0
mbm Sunday, 13 November 2011 05:36 PM
பேசும் பேச்சு ஒன்றையும் செயல்ல காணலியே... ஒருவேளை ஊருக்குத்தான் உபதேசமோ!
Reply : 0 0
safa Sunday, 13 November 2011 05:03 PM
என்னத்த உறுதிப்படுத்துவது உறுதிப்படுத்தின மாத்திரம் செய்து கொடுத்துரவாங்களா... குடிகாரன் பேச்சு விடிஞ்சாத்தான் போச்சு. ஆனா. அரசியல்வாதி பேச்சு அரசியல் மேடையோட போச்சி..
Reply : 0 0
Nafar Sunday, 13 November 2011 02:57 PM
பசிர் அவர்களே பிரதேச வாதம் என்று ellam pesivittu ippo inavatham என்று pesukirirkal. entha முதல் அமைச்சர் வந்தால் என்ன? உங்கள் கடமைகளை சரியாக செய்யுங்கள். அடுத்த தேர்தலில் கட்டாயம் இனவாதம் இருக்கும் போல. முஸ்லிம் முதல் அமைச்சர் என்று சொல்லி தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இடையில் பிரச்சினை உண்டு பண்ணாத்தான் போறிங்க போலே.
Reply : 0 0
kalmunaiyaan Sunday, 13 November 2011 10:39 AM
பிரதேச வாதத்தினையும் இனவாதத்தினையும் காலத்துக்கு ஏற்றாப்போல் பேசுவதை விட்டு, மக்களுக்கு ஏதாவது செய்ய முயற்சி செய்யுங்கள் ...... இன்று வேலை இல்லாத இளைஞர்கள் அதிகமாக உள்ளார்கள்..... இதை பற்றி அடுத்த கூட்டத்தில் பேசுங்கள்.....
Reply : 0 0
sakeena Sunday, 13 November 2011 06:08 AM
நமக்குள்ளேயே நயவஞ்சகர்கள் இருக்கின்ற போது....! அன்றிருந்தே நம் சமூகம் கண்ட உண்மை இது....
Reply : 0 0
ummpa Saturday, 12 November 2011 10:55 PM
திடமும் திடகாத்திரமான கருத்துக்களை கூறுவதுபோல் இருக்கலாம். ஆனால், இப்படியான நிறைய விடுதலை கீதங்களை பலவருடங்களாக கேட்டு எங்கள் காதுகள் சுருங்கிவிட்டன. இப்போது தேவை எங்கள் நிலம் உரிமை மற்றும் இலங்கை என்ற பிரஜைக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அதை முதல் உறுதிப்படுத்திவிட்டு மற்ற விடயங்களை பின்னர் பேசிக்கொள்ளுவோம்.
Reply : 0 0
ullooran Sunday, 13 November 2011 04:42 AM
பசீர் ஐயா அவர்களே..! முதலமைச்சர் என்பது தேசியப்பட்டியல் மூலம் கொடுப்பதுமில்லை. முடிந்தால் நீங்கள் மேடையில் பேசுவதைப்போல் உங்கள் அரசியல் வரலாற்றில் நீங்கள் நமது முஸ்லிம் சமுகத்திற்கு செய்ததென்ன? கூறமுடியுமா.....?
Reply : 0 0
Akkaraipattu Sunday, 13 November 2011 04:33 AM
இவர்கள் கரண்டுக்கும் பாடி பெற்றிக்கீம் பாடுபவர்கள்...............
Reply : 0 0
ukraswin Sunday, 13 November 2011 04:32 AM
தயவு செய்து அஷ்ரப் கிராமம் பற்றி சிந்திங்க. பொய் செல்லி முஸ்லிம்கள ஏமாற்ற வேண்டாம். ப்ளீஸ் ப்ளீஸ்.
Reply : 0 0
ruzny Sunday, 13 November 2011 03:11 AM
எங்க நம்ம பைசல் சேர். ஜாவத் சேர் . ஜமீல் சேர். நிசாம் சேர். வேற கட்சி தொடங்கவோ ...?
Reply : 0 0
Mohammed Hiraz Sunday, 13 November 2011 03:00 AM
துணிவு இருக்கா இவர்தான் எங்கள் முதலமைசர் வேட்பாளர் என இப்போதே அறிவிப்பதட்கு??? முஸ்லிம் கட்சிகள் எல்லாம் ஒரு பொது உடன்பாட்டிட்கு வந்து எல்லா கிழக்கிலங்கை முஸ்லிம் அரசியல் கட்சிகளும்,அரசியல் ,தலைமைகளும்,பொது அமைபுகளும்,ஊர் தலைமைகளும் பொறுப்புடன் ஒரு பொது உடன்பாடிட்கு வந்து ஒரு பொது சின்னத்திலும் புதிய ஒரு பொது கூட்டமைபிலும் சகல முஸ்லிம்கட்சிகளின் வேட்பாலர்களையும் களம் இறங்கவைத்து கிழக்கிலங்கையில் முஸ்லிம்களின் செல்வாகையும் பெரும்பான்மையையும் நிறுபிக்க நடவடிகை எடுப்பதே உசிதமானதும்,புத்திசாலித்தனமானதும், இராஜ தந்திர வெற்றியை தர கூடியதும் எமது இறுப்பையும் உரிமையையும் பாதுகாபதட்கான சகல நெருக்கடிகளும் அரசியல் ரீதியான பின்னடைவுக்ளும் முஸ்லிம் சமுதாயத்தில் இருந்து நீங்க காலத்திட்கு ஏற்ற தகுந்த வழி முறையாகு
Reply : 0 0
anilar Sunday, 13 November 2011 02:31 AM
சரி உங்கிட ஆள் முதலமைச்சரா வந்தா அபகரிக்கப்பட்ட மட்டக்களப்பு கல்லியன் காடு மஸ்ஜிதுல் பிர்தௌஸை (மட்டக்களப்பு பாபரி மஸ்ஜித்) மீட்டுத்தருவிங்களா?
Reply : 0 0
samsudeen Sunday, 13 November 2011 02:18 AM
குலதூரான் அவர்களே முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் பலர் இல்லை என்பதை தலைவர் சிராசிடம் வினவியது மட்டுமல்லாமல், சிராசுக்கு சொன்ன புத்திமதி, நீங்கள் அரசியலுக்கு புதியவர் சாக்கடைகள் பற்றி நிறைய படிக்க வேண்டும் என்றும் சொன்னார்.
Reply : 0 0
Nusky Sunday, 13 November 2011 12:51 AM
அடுத்த முதலமைச்சர் பதவி ஹரீசிக்கே!
Reply : 0 0
kulathooran Sunday, 13 November 2011 12:20 AM
மேயர் வரவேற்பு நிகழ்வில் மு.கா. மாகான உறுப்பினர்களான ஜமீல்,ஜ வாத் காணவில்லையே? ஏன் பிரதி மேயர் பற்றியும் செய்தியில் குறிப்பிடவில்லையே? அவர்களுக்கு அழைப்பு இல்லையா? அமைச்சரே மாநகரின் ஒரே கட்சி உறுப்பினர்கள்,கட்சி தலைவர் பங்குகொண்ட நிகழ்வில் இல்லாத நிலையில் எப்படியப்பா மாகாணத்தின் முஸ்லிம் முதல் அமைச்சரை பெறுவது? புரியாயாதுள்ளதே?
Reply : 0 0
naleer Saturday, 12 November 2011 11:54 PM
அஸ்ஸலாமு அழைக்கும் சஹோதரர்களே நீங்கள் மேயர் பதவிக்கே இப்படி சண்டை போடுகிறீர்கள். எப்படி முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தை கிழக்கு மகாணத்துக்கு தருவது? யாருக்கு கொடுப்பது? முதல்ல உங்கட பிரதேசவாதத்த விடுங்க ஒற்றுமையா இரிங்க. தலைமைத்துவம் Thaana வரும்.
Reply : 0 0
Nusky Saturday, 12 November 2011 11:44 PM
பார்ரா... பார்ரா.. பசீருக்கு முதலமைச்சர் ஆசை வந்திட்டு...!!
Reply : 0 0
samsudeen Saturday, 12 November 2011 11:39 PM
அமைச்சரே பேசிவிட்டு சென்றுவிட்டீர்கள் , இருந்திருந்தால் தலைவர் உங்களுக்குதான் முதலமைச்சர் என்று கூறினார். அந்த வார்த்தை கேட்காமல் சென்று விட்டீர்களே ஐயோ paavam.
Reply : 0 0
jaleel Saturday, 12 November 2011 11:20 PM
ஒரு மேயருக்கே பிடித்த சண்டை இன்னும் ஓயல்ல . இப்போ முதலமைச்சர்!
Reply : 0 0
meenavan Saturday, 12 November 2011 10:56 PM
அமைச்சரே பிரதேச வாதம் தோல்வி அடையவில்லை? பிரதேசவாதத்தை பெட்ரோல் ஊற்றி உச்சாணி கோப்பில் ஏற்றி அழகு பார்த்ததே முகவெற்றிலை மா நகர தேர்தல்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
38 minute ago
2 hours ago