2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

அக்கரைப்பற்று – கல்முனை மாவட்ட சாரணிய சங்கத்தின் ஏற்பாட்டில் மூன்று நாள் பயிற்சி முகாம்

Super User   / 2011 நவம்பர் 12 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அக்கரைப்பற்று – கல்முனை மாவட்ட சாரணிய சங்கத்தின் ஏற்பாட்டில் சாரணர்களுக்கான மூன்று நாள் பயிற்சி முகாமொன்று பாலமுனை ஹிக்மா வித்தியாலயத்தில் இடம்பெற்று வருகின்றது.

அக்கரைப்பற்று – கல்முனை மாவட்ட சாரணிய சங்கத்தின் உதவி மாவட்ட ஆணையாளரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினருமான எஸ்.எல்.முனாஸ் தலைமையில் இடம்பொறும் மேற்படி முகாமுக்கு பொறுப்பாளராக அக்கரைப்பற்று – கல்முனை சாரணிய சங்கத்தின் மாவட்ட உதவி ஆணையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா கடiமையாற்றுகின்றார்.

நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமான இப்பயிற்சி முகாமின் இரண்டாவது நாள் நிகழ்வுகளில் அக்கரைப்பற்று வலய கல்வி பணிப்பாளர் அஷ்ஷேய்க் ஏ.எல்.எம். காசிம் மௌலவி பிரதம அதிதியாகவும், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.எம். நஸீர் விசேட அதிதியாகவும் கலந்துகொண்டனர்.

இதன்போது -  சிறந்த முகாம், சிறந்த சாரணர் தெரிவுசெய்யப்பட்டு அதிதிகளால் பரிசுகள் வழங்கப்பட்டதுடன், போட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வெற்றியீட்டிய சாரணர்களுக்கு வெற்றி கிண்ணங்களும் அதிதிகளால் வழங்கப்பட்டன. இப்பயிற்சி முகாமில் 10 பாடசாலைகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 150 சாரணர்கள் கலந்து கொண்டுள்ளர்.


 


You May Also Like

  Comments - 0

  • avathaani Saturday, 12 November 2011 11:17 PM

    அக்கரைப்பற்று - கல்முனை உதவி ஆணையாளர் தனது உடையில் சற்று கவனமெடுங்கள். T-shirt பொருத்தமல்ல, சாரணிய உடை எடுப்பாக இருக்கும்.

    Reply : 0       0

    Nusky Sunday, 13 November 2011 01:06 AM

    முஸ்தபா சேர் என்றால் SCOUT....Scout என்றால் அது முஸ்தபா சேர்..! அவருக்கெல்லாம் UNIFORM அவசியமில்லை....!! அவர் இந்த வயசிலும் களத்தில் உள்ளார் என்றால் அது பெருமைப்படக்கூடியது.

    Reply : 0       0

    uthayan Sunday, 13 November 2011 03:35 AM

    என்ன இருந்தாலும் சீருடை அவசியம் ஒரு உதவி மாவட்ட ஆணையாளருக்கு. வழிகாட்டல் அவசியம். நாளை சாரணர்களும் சீருடை இல்லாது முகாம்களில் கலந்து கொள்வார்கள். இது அவசியமா?

    Reply : 0       0

    avathaani Sunday, 13 November 2011 04:00 AM

    தம்பி நுஸ்கி நீங்க சொல்வது சரி வாப்பா. என்றாலும் ஆள் பாதி ஆடை பாதி அல்லவா? ஆம் 63-64 வயதிலும் களத்தில் உள்ளது மகிழ்ச்சியே.

    Reply : 0       0

    nilam Sunday, 13 November 2011 04:40 AM

    அட்டாளைச்சேனை பிரதேசசபை உறுப்பினரின் யுனிபோம் எடுப்பாக உள்ளது அவர் ஸ்டைல் சூப்பர்.

    Reply : 0       0

    சிறாஜ் Sunday, 13 November 2011 05:11 AM

    முஸ்தபா சேரின் வயது இப்போது 67 என்று நான் அறிந்தேன். மகிழ்ச்சி இப்படி இளமையாக தெரிகிறார். மாஷா அல்லாஹ்.

    Reply : 0       0

    தம்பி Sunday, 13 November 2011 05:59 AM

    முட்டையில்..... பிடுங்குபவர்களுக்கு எதிலும் பிழையே உறுத்திக் கொண்டு தெரியும்!

    முஸ்தபா சேர் அணிந்திருப்பது - சாரணர் சின்னமிடப்பட்ட ரி ஷேட்தான். இன்றைய தினம் நானும் அந்த முகாமிலிருந்ததால், அருகிலிருந்து அவதானித்தேன்!

    முஸ்தபா சேருக்கு 68வயது! களத்தில் நின்று அவர் இயங்குவதைப் பார்த்தால் நமக்கு மயக்கம் வரும் ராசா!!

    Reply : 0       0

    asmeer Monday, 14 November 2011 03:07 PM

    ஹாய் எல்லாருக்கும்

    Reply : 0       0

    Thamseen Wednesday, 23 November 2011 02:35 AM

    சாரணியத்திற்காக என்றும் எப்போதும் முஸ்தபா சார் ........!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .