2025 ஜூன் 25, புதன்கிழமை

கணினி துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2011 நவம்பர் 30 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

சாய்ந்தமருது, சிம்ஸ் கெம்பஸில் கணினி துறையில் டிப்ளோமா பட்டம் பெற்ற இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை மாலை சாய்ந்தமருது பெரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.

யூ.எஸ்.எயிட் நிறுவனத்தின் அனுசரணையில், சிம்ஸ் கெம்பஸ் முகாமைத்துவ பணிப்பாளர் அன்வர் முஸ்தபா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில், யூ.எஸ்.எயிட் நிறுவன திட்ட அபிவிருத்தி முகாமையாளர் நேசராசா தம்பிராஜா, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம்,  தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அனூசியா சேனாதிராஜா ஆகியோர்  கலந்துகொண்டனர்.

வசதி குறைந்த மாணவர்களும் உயர் கணினி கற்கை நெறியினை பயிலும்  புலமைப்பரிசில் திட்டத்தின் அடிப்படையில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சிறந்த தொழில் வாயப்பினை பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த கற்கை நெறிகள் ஓழுங்கு செய்யப்பட்டிருந்தன.


You May Also Like

  Comments - 0

  • pasha Friday, 02 December 2011 07:04 PM

    பட்டம் கொடுக்க பல பேர், தொழில் கொடுக்க சில பேர்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .