2025 ஜூன் 25, புதன்கிழமை

ஆசிய மன்றத்தினால் பாடசாலை நூலகங்களுக்கு புத்தங்கள் அன்பளிப்பு

Super User   / 2011 டிசெம்பர் 02 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆசிய மன்றத்தினால் அம்பாறை மாவட்டதிலுள்ள பாடசாலை நூலகங்களுக்கு சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான புத்தகங்கள் அன்பளிப்பு செய்யப்படவுள்ளதாக ஆசிய மன்றத்தின் கிழக்கு மாகாண நிகழ்ச்சி திட்ட அதிகாரி றிசாட் ஷெரீப் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

இதனடிப்படையில் கல்முனை கல்வி வலயத்திலுள்ள 62 பாடசாலைகளுக்கும் சம்மாந்துறை கல்வி வலயத்திலுள்ள 68 பாடசாலைகளுக்குமே புத்தகங்கள் அன்பளிப்பு செய்யப்படவுள்ளது  என அவர் குறிப்பிட்டார்.

இந்த புத்தகங்கள் மிக விரைவில் உரிய வலய கல்வி பணிப்பாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக றிசாட் ஷெரீப் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தேவையான ஒரு தொகுதி நூல்களை ஆசிய மன்றம் முன்னர் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு மேலதிகமாக அம்பாறை மாவட்டத்திலுள்ள 15 உள்ளூராட்சி மன்றங்களுக்கு பல்வேறு வகையான உதவிகளை மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • gaf Friday, 02 December 2011 10:21 PM

    நல்ல விடயம், தொடருங்க ரிசாத் ...

    Reply : 0       0

    rizath Sunday, 04 December 2011 03:52 PM

    இன்னும் பல செயல்கள் தொடரட்டும்.

    Reply : 0       0

    siyatha Saturday, 10 December 2011 08:03 PM

    வாழ்த்துக்கள்... டியூஷன் இற்கு ஆட்கள் இணைக்கும் திட்டமாக இல்லாமல் இருந்தால் சந்தோசம்.

    Reply : 0       0

    Aboobacker Saturday, 10 December 2011 08:15 PM

    வாழ்த்துக்கள். இதிலுள்ள வினாக்களுக்கான விடைகளை தங்களது வழமைபோன்று தபால் மூலமாஹவா அறிந்து கொல்வது ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .