2025 ஜூன் 25, புதன்கிழமை

கிழக்கு மாகாண தபால் திணைக்கள பிரதேச நிர்வாக உத்தியோகஸ்தராக மதனசேகரம் தம்பி ஐயா நியமனம்

Super User   / 2011 டிசெம்பர் 03 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

சம்மாந்துறை, வீரமுனையை சேர்ந்த மதனசேகரம் தம்பி ஐயா இலங்கை தபால் திணைக்களத்தின்; கிழக்கு மாகாண பிரதேச நிர்வாக உத்தியோகஸ்தராக நியமிக்கப்பட்டுள்ளார்

இவர் தமது கடமைகளை நேற்ற வெள்ளினக்கிழமை மட்டக்களப்பு பிரதி தபால் மா அதிபர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

இவர் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, அக்கரைப்பற்று, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய  தபால் அத்தியட்சகர்  அலுவலக பிரிவுகளுக்கான நுண்ணாய்வு பரிசோதகராக கடமையாற்றி வந்துள்ள நிலையிலேயே இந்நியமணம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

1981ம் ஆண்டு தபாலதிபராக இணைந்து கொண்ட இவர், சம்மாந்துறை, கல்முனை ஆகிய தபாலகங்களின் பிரதம தபால் அதிபராகவும்  1994ஆம் ஆண்டுகளில் மட்டக்களப்பு தபாலதிபர்கள் பயிற்சிக் கல்லூரியின் போதனாசிரியராக கடமையாற்றியுள்ளார். இவர் ஒரு உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரியாவார்.


You May Also Like

  Comments - 0

  • MOHAMED Saturday, 03 December 2011 08:49 PM

    ஐயாவுக்கு எமது மனமார்ந்ந்த வாழ்த்துக்கள் ---

    Reply : 0       0

    MOHAMED Saturday, 03 December 2011 08:53 PM

    அக்கரைப்பற்று டி எஸ் ஆக வர வேண்டும் என்று விரும்புகின்றோம்.

    Reply : 0       0

    abdul jabbar farees , spm alhilal rd Sunday, 04 December 2011 03:36 AM

    வாழ்த்துக்கள் மென்மேலும் வளர. இவன் உங்கள் ஊழியன்.

    Reply : 0       0

    M.I.Aliyar Monday, 05 December 2011 06:40 PM

    waaltukkal

    Reply : 0       0

    S.L.Najeema Tuesday, 06 December 2011 12:37 AM

    மேலும் உயர வாழ்த்துக்கள்

    Reply : 0       0

    mansoor a.cader Tuesday, 06 December 2011 02:43 AM

    மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறேன். நீங்கள் மென்மேலும் உயர்வடைக. ஆனந்தன் இருந்திருப்பின் மிகவும் மகிழ்ந்திருப்பார்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .