2025 ஜூன் 25, புதன்கிழமை

அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்க பேரவையின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்தில் கருத்தரங்குகள்

Super User   / 2011 டிசெம்பர் 04 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்க பேரவையின் ஏற்பாட்டில் ஒரே நேரத்தில் இரு கருத்தரங்குகள் இன்று ஞாயிற்றுக்கிழமை அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்றது.

இதன் ஒரு அங்கமாக இஸ்லாமிய மத போதகர்களுக்கு 'சமூகத்தில் போதைப்பொருள் பாவனை' எனும் தலைப்பிலான கருத்தரங்கு கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கத்தின் அம்பாறை மாவட்ட ஆணையாளர் எஸ்.தஸ்தகீர் தலைமையில் இடம்பெற்றது.

இக்கருத்தரங்கிற்கு வளவாளராக கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையின் வைத்திய அதிகாரியான எஸ்.எம்.ஏ.அஸீஸ் கலந்துகொண்டார்.

இக்கருத்தரங்கின் இறுதியில் இடம்பெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கல்முனை மேயர் எம்.எஸ்.சிராஸ், அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்க பேரவையின் தலைவர் சட்டத்தரணி நத்வி வஹாப்த்தீன், உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர்.

இதேவேளை, கல்முனை மாநகரிலுள்ள ஆசிரியர்கள் மற்றும் கள அரச உத்தியோகத்தர்களுக்காக 'சுகாதாரமும் சூழலும் மற்றும் சமூகத்தில் தொற்றா நோய்கள்' என்ற தலைப்பிலான கருத்தரங்கு ஸாஹிறா தேசிய பாடசாலை நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு வளவாளராக கல்முனை பிராந்திய தொற்றா நோய்கள் தொடர்பான வைத்திய அதிகாரி எம்.எம்.சாபி கலந்துகொண்டார்.

இக்கருத்தரங்கில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல், ஓய்வுபெற்ற கல்விக் கல்லூரி விரிவுரையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா, கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை அதிபர் எம்.எம்.இஸ்மாயில் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்க கல்முனை பிரதேச தலைவர் எஸ்.எம்.எம்.றம்ஸான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • Hunais Monday, 05 December 2011 03:07 AM

    சமூகத்தை ஏமாற்றுபவர்களுக்கு மத்தியில் நிதானமாக செயற்படுங்கள் மேயரே.

    Reply : 0       0

    gaf Monday, 05 December 2011 04:29 AM

    ஹுனைஸ்... அவசரப்பட்டு கருத்துக்களை சொல்லாதைங்க இறைவனின் கோபத்துக்கு ஆளாகிடுவிங்க .

    Reply : 0       0

    meenavan Monday, 05 December 2011 05:47 AM

    ஹுனைஸ் சமூகத்தை ஏமாற்றுபவர்களில் முன்னிலை வகிபாகம் உடையவர்கள் அரசியல்வாதிகள் என்பதை, பாமரனும் அறிந்து வைத்துள்ளதை நீங்கள் அறியாதது ஏனோ? gaf உங்கள் கருத்தை வரவேற்கிரேன்.

    Reply : 0       0

    vanndu Monday, 05 December 2011 05:50 AM

    நடக்கட்டும் ராஜா நடக்கட்டும். ஆனால் இவர்களில் வாலிபர்கள் யாரும் தெரியவில்லை.

    Reply : 0       0

    செம்பகம் Monday, 05 December 2011 02:51 PM

    வாண்டுக்கு தேவையில்ல கற்பனை .முன்னானுக்கும் மூளைக்கும் தொடர்பில்லாத கதைகளை அளந்து விமர்சனத்திற்கு ஆளாகதிங்கோ.

    Reply : 0       0

    uooran Monday, 05 December 2011 05:53 PM

    கௌரவ மேயர் அவர்களே
    சாய்ந்தமருது மக்களால் பலத்த எதிர்பார்ப்புடன் தெரிவு செய்யப்பட்ட உங்கள் முன்னால் பல தேவைகள் தேங்கிக் கிடக்கின்றன
    மாட்டு மடுவம் இல்லாமல் அசுத்தமான முறையில் கரைவாகு வட்டை உள்வீதியில் மாட்டை அறுக்கின்றார்கள். சாய்ந்தமருதை ஊடறுக்கும் தோனா ஓரத்தில் குப்பைகள் குவிகின்றன உங்களுக்கு வரவேற்பு தந்தது போதும். முதலில் மாட்டுமடுவத்தைக்கட்டுங்கள் குப்பைகளை அள்ளிச்செல்ல ஆங்காங்கே ட்ரெக்ட்டர் பெட்டிகளை நிறுத்தி வைத்து குப்பைகளை அள்ளுங்கள்.
    இதுதான் எங்களது அவசிய தேவை.

    Reply : 0       0

    pasha Monday, 05 December 2011 09:57 PM

    வாண்டு நன்றாக சொன்னீர்கள். இளைஞ்சர்கள் எல்லாம் face book, இன்டர்நெட் கிரிக்கெட் எண்டு காலம் போக்குகிறார்கள் இளைஞர்களுக்கான இவ்வாறான நிகழ்வுகளில் முதியோரை தான் காண முடிகின்றது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .