2025 ஜூன் 25, புதன்கிழமை

'மதங்களுக்கிடையிலான பல்வகைமை' பற்றிய ஒன்று கூடல்

Super User   / 2011 டிசெம்பர் 05 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட், எம்.சீ.அன்சார்)

தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சும், ஜேர்மன் அபிவிருத்தி நிறுவனமும் இணைந்து 'மதங்களுக்கிடையிலான பல்வகைமை' பற்றிய ஒன்று கூடல் நிகழ்வு இன்று நாவிதன்வெளி 02 ஆம் பிரிவிலுள்ள பல்தேவைக் கட்டிடத்தில் இடம்பெற்றது.

ஜேர்மன் அபிவிருத்தி நிறுவனத்தின் பிரதிநிதி க.ஜெகன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் கலையரசன் பிரதம அதியாகவும், அதிதிகளாக, உதவித் தவிசாளர் ஏ. ஆனந்தன், மத்திய முகாம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜித் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும்ர கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில், சமயங்களுக்கூடான சமூக நல்லுறவு எனும் தலைப்பில் கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் இ.சகாயசீலன் சொற்பொழிவாற்றினார்.

மேலும், இனங்களுக்கிடையிலான ஒற்றுமை மற்றும் புரிந்துணர்வுகளை ஏற்படுத்தும் வகையிலான நாடகங்களும் இதன்போது அரங்கேற்றப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .