2025 ஜூன் 25, புதன்கிழமை

'பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழித்தல்' கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 06 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சின் அனுசரணையுடன் கல்முனை பிரதேச செயலகத்தினால் நடத்தப்பட்ட 'பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழித்தல் எனும் தலைப்பில்  விழிப்புணர்வுக் கருத்தரங்கு பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் வளவாளர்களாக கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி எம்.எஸ்.எம்.ஜாபிர், கல்முனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ்.எம்.சதாத், கல்முனை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.பி.அபுல் ஹஸன், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி முரசொலி மாறன், சமுர்த்தி தலைமை அலுவல முகாமையாளர் ஏ.ஆர்.எம். சாலிஹ் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

பிரதேச செயலக உத்தியோகத்தர்களும், பொலிஸ் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்ட இக்கருத்தரங்கு தொடர்பான வேலைத்திட்டமானது எதிர்வரும் 10ஆம் திகதி வரையும் இடம்பெறவுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .