2025 ஜூன் 25, புதன்கிழமை

மழலைகள் மன்றம்

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 06 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

ஆரம்பப் பிரிவு மாணவர்களின் ஆளுமை விருத்தியை மேம்படுத்தும் நோக்குடனும், பாடசாலையின் வருட இறுதியை மகிழ்ச்சிகரமான இணைப்பாடவிதான செயற்பாட்டினூடாகக் கொண்டு செல்லும் வகையிலும், அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் 'மழலைகள் மன்றம்' எனும் கலை நிகழ்வொன்று இன்று செவ்வாய்க்கிழமை பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

பாடசாலையின் ஆரம்பப் பிரிவு வலயத் தலைவரும் சிரேஷ்ட ஆசிரியருமான ஐ.சஹுபுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர் ஏ.எல்.கிதுறு முஹம்மட் அதிதியாகக் கலந்து கொண்டார்.

மேற்படி மழலைகள் மன்றம் நிகழ்வில் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் கலை மற்றும் கலாசார ரீதியிலான திறமைகளை வெளிக்கொணரும் வகையில் ஆடல், பாடல், அபிநயம் மற்றும் நகைச்சுவை போன்ற நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .