2025 ஜூன் 25, புதன்கிழமை

சீர்பாததேவி சிறுவர் இல்ல மாணவர்களுக்கு பால் வழங்கும் திட்டத்துக்காக நிதியுதவி

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 07 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

அம்பாறை மாவட்டத்தின்  சம்மாந்துறை வீரமுனை சீர்பாததேவி சிறுவர் இல்ல மாணவர்களுக்கு நாளாந்தம் ஒரு கோப்பை பால் வழங்கும் திட்டத்துக்காக கறவைப்பசுக்களை பெற்றுக்கொடுப்பதற்கு 320,000 ரூபா நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

கனடாவிலுள்ள உதவும் கரங்கள் அமைப்பு, கல்முனை நகர லயன்ஸ் கழகத்தினுடாக இந்த நிதியுதவி வழங்கியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பெற்றுக்கொள்ளப்பட்ட கறவைப் பசுக்களை இல்ல நிர்வாகத்தினரிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை வீரமுனை சீர்பாததேவி சிறுவர் இல்லத்தில் நடைபெற்றது.

லயன்ஸ் தலைவர் லயன் கே.பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இல்லப் பணிப்பாளர் பொறியியலாளர் ரீ.விநாயகமூர்த்தி, லயன்ஸ் வலயத்தலைவர் எஸ்.தைரியராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .