Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Kogilavani / 2011 டிசெம்பர் 07 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான், எம்.ஜே.எம்.ஹனீபா)
கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் ஆசிரியர் இடமாற்றத்தை நிறுத்தக் கோரி சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர்களின் குடும்பத்தினர் இன்று காலை சம்மாந்துறை ஹிஜ்ரா பள்ளிவாசலின் முன்பாக ஆர்பாட்டமொன்றில் ஈடுப்பட்டனர்.
இவர்கள் வலயக்கல்விப் பணிப்பாளரிடம் மகஜர் ஒன்றை கையளிக்கும் முகமாக வலயக் கல்வி பணிமனையை நோக்கி பதாதைகள், கோசங்களுடன் ஊர்வலமாக செனறனர்.
இதன்போது பெண்களின் இடமாற்றத்தை இரத்து செய், எமது குழந்தைகளின் உரிமையை பாதுகாருங்கள், சம்பூரில் பெண் ஆசிரியைக்கு நடந்த நிகழ்வை எமக்கு ஏற்படுத்தாதே, தாயையும் குழந்தையையும் பிரித்து தாய்-சேய் உரிமையை மறுக்காதே, பிள்ளை ஓர் இடத்தில் தந்தை ஓர் இடத்தில் தாய் வேறோரு இடத்திலா?, மன உளச்சலுடன் தூரப்பிரதேசத்தில் கற்பிக்க முடியுமா?, எனது தாயை என்னை விட்டுப் பிரிக்காதே, எங்கள் புள்ளிகளை ஏன் எங்களிடம் காட்டவில்லை என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளுடன் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் சென்றனர்.
சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர் ஆசிரியர்களின் மகஜரைப் பெற்றுக் கொண்டதுடன் இவ்விடையத்தை உடனடியாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்ட வருவதாகவும் உறுதியளித்தார்.
KALAM Thursday, 08 December 2011 12:05 AM
இந்த இடமாற்றங்கள் மருதமுனை ஆசிரியர்களுக்கு இல்லையா ?
Reply : 0 0
ravi Thursday, 08 December 2011 12:35 AM
குட்டும்பமாக அரசாங்க தொழில் ,,,,,,,,,, சரவணா ......... அடுத்த தொழில்களுக்கும் இப்படி சலுகை வழங்கலாமே....
Reply : 0 0
mim.mansoor Thursday, 08 December 2011 05:01 AM
பாவம், அரசியல் அனாதைகள்.
Reply : 0 0
rakkeep Thursday, 08 December 2011 05:23 AM
நட்பிட்டிமுனைக்கும் இல்லையா ?
Reply : 0 0
ismail Thursday, 08 December 2011 06:35 AM
நன்றாக சொன்னீர்கள் கலாம்,
கல்முனை வலயத்தில் மருதமுனை ஆசிரியர்களுக்கு பெரிய நீலாவணைக்கும் பாண்டிருப்புக்கும் இடமாற்றம். வலயத்திலுள்ள திறமையாக கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மருதமுனைக்கு இடமாற்றம் . ஏனைய அப்பாவிகளுக்கு வலயத்திற்கு வெளியில் இடமாற்றம்.. என்ன கொடுமை சாமி......
Reply : 0 0
abul kalam Thursday, 08 December 2011 06:40 AM
மருதமுனையிலுள்ள அதிகமான ஆசிரியர்களுக்கு வைத்திய சான்றிதழ் உள்ளதாம் அதனால் தூர இடங்களுக்கு போக முடியாதாம்.
மருதமுனையின் கல்வித்தரம் தொடர்ந்தும் பாதுகாப்பதே கல்வி அதிகாரிகளின் திட்டமாக இருக்கலாம்.
Reply : 0 0
pasha Friday, 09 December 2011 03:19 PM
கல்முனையில் 185 பேர் இடமாற்றம் ஆனால் ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லை ஏன் சம்மாந்துறை மக்கள் எதட்கேடுதாலும் ஆர்பாட்டம்?
Reply : 0 0
meenavan Friday, 09 December 2011 10:31 PM
ஏற்கனவே செய்யப்பட்ட இடமாற்றம்,குளறுபடி காரணமாக கல்வி பணிப்பாளர் பதவி இழந்தார்,இடமாற்றம் ஒத்தி வைப்பு,இடைப்பட்ட காலத்தினுள் ஆசிரியர்களின் சேவை இடங்களை கணணி மயப்படுத்தி இருந்தால் சிக்கலை குறைத்திருக்கலாம்.ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை ஆர்பாட்டம் தொடர்கிறது,மாணவர் கல்வி பாதிக்கப்படபோகிறது.குதிரைகள் அதிகாரம் எது செய்யுமோ?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
8 hours ago