2025 ஜூன் 25, புதன்கிழமை

கிட்டங்கி வீதியை புனரமைக்க வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 07 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

கல்முனை மாநகரசபைக்குட்பட்ட கிட்டங்கி வீதியினை புனரமைப்பதோடு, அங்குள்ள பாலத்தினை முழுமையாக நிர்மாணித்துத் தருமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேற்படி கிட்டங்கி வீதியானது மிக மோசமாக சிதைவடைந்து காணப்படுவதோடு, மழைக்காலங்களில் வெள்ளத்தில் மூழ்கும் நிலைமையும் காணப்படுகின்றது. இதனால் இவ்வீதியினை புனரமைப்பதோடு, அங்குள்ள பாலத்தின் மட்டத்துக்கு வீதியினை உயர்த்த வேண்டுமெனவும் மக்கள்  தெரிவித்துள்ளனர்.

புதிதாக கிட்டங்கிப் பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளபோதும், இப்பாலம் பூரணமாக நிர்மாணிக்கப்படாததால் வெள்ள காலங்களில் குறித்த பாலத்தினைக் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளன.

மேலும் பாலத்துக்கும்  வீதிக்குமிடையில் பாரிய ஏற்றத்தாழ்வு உள்ளமையினால், வெள்ள காலங்களில் கிட்டங்கி வீதி, வெள்ளத்தில் மூழ்கின்றன. இந்நிலையினை மாற்ற வேண்டுமெனில் பாலத்தின் மட்டத்துக்கு வீதியினை நிர்மாணிக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

கடந்த வெள்ளத்தின்போதும், கிட்டங்கி வீதி வெள்ளத்தில் முற்றாக மூழ்கியதையடுத்து பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதில் பாரிய இடர்களை எதிர்நோக்கியிருந்தமை நினைவு கொள்ளத்தக்கது.

கல்முனை பிரதேசத்தினையும் - நாவிதன்வெளி பிரதேச செலகப் பிரதேசங்களையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ள கிட்டங்கிப் பாலம் மற்றும் வீதியினூடாக – கொலனி, உகனை, மத்திய முகாம் மற்றும் மண்டூர் போன்ற பிரதேசங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். இதேவேளை, இவ் வீதியினூடாக உகனை சென்று, அங்கிருந்து மஹியங்கனை கண்டி ஊடாக கொழும்பு செல்ல முடியும்.


You May Also Like

  Comments - 0

  • somu Thursday, 08 December 2011 06:50 AM

    அடுத்த வெள்ளம் வரட்டும் பார்ப்போம். ஏன் இப்ப அவசரம்?

    Reply : 0       0

    bish Thursday, 08 December 2011 09:08 PM

    அண்ணே சோமு! அடுத்த வெள்ளமில்லை தேர்தல் வரட்டும் பார்ப்போம்!

    Reply : 0       0

    rafeek Friday, 09 December 2011 01:36 PM

    somu, இதன் வழியாக பயணித்தவர்களுக்குதான் இதன் கஷ்டம் புரியும். கற்பூர வாசனை கழுதைக்கு புரியுமா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .