2025 ஜூன் 25, புதன்கிழமை

அட்டாளைச்சேனையில் புத்தகக் கண்காட்சி

Kogilavani   / 2011 டிசெம்பர் 07 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

தேசிய வாசிப்பு மாதத்தினைக் கொண்டாடும் வகையில் அட்டாளைச்சேனைப் பிரதேச சபையினால், ஏற்பாடு செய்யப்பட்ட புத்தகக் கண்காட்சியொன்று இன்று புதன்கிழமை அட்டாளைச்சேனை பொது நூலகக் கட்டிடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அட்டாளைச்சேனை பொது நூலகத்தின் நூலகர் ஏ.சி. அன்வர் சதாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,  தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் பிரதம அதிதியாகவும், அட்டாளைச்சேனை பிரதேசசபைத் தவிசாளர் ஏ.எல்.எம். நசீர் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டனர். மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உப தவிசாளர் ஏ.எம். அன்சில், பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எல். முனாஸ், ஐ.எல். மனாப், ஏ.எல். அமானுல்லா, என்.எல். யாசிர் ஐமன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேற்படி புத்தகக் கண்காட்சியில், அட்டாளைச்சேனை பொது நூலகம் மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழ நூலகத்திலுள்ள நூல்கள் பார்வைக்கு வைப்பட்டுள்ளதோடு, அம்பாறை மாவட்ட எழுத்தாளர்களின் புத்தகங்களும் பிரத்தியேகமாகக் காட்சிப்படுத்தப்பட்டன.

இப் புத்தகக் கண்காட்சி தொடர்ந்து மூன்று நாட்களுக்குத் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

                                                                     


You May Also Like

  Comments - 0

  • சிறாஜ் Thursday, 08 December 2011 03:59 AM

    அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் சேவையினைப் பாராட்டுகிறேன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .