Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 டிசெம்பர் 08 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
வாசிப்புப் பழக்கத்தினை உற்சாகப்படுத்தும் வகையிலான வீதி நாடகமொன்று அட்டாளைச்சேனை பிரதான வீதிக்கு அருகாமையிலுள்ள பொதுநூலக வளாகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.
தேசிய வாசிப்பு மாதத்தையொட்டி அட்டாளைச்சேனை பிரதேசசபையின் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனை பொது நூலகத்தினால் நடத்தப்படும் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளின் ஓரங்கமாகவே இந்த வீதி நாடகமும் நடைபெற்றது.
வாசிப்புப் பழக்கத்தின் அவசியம், நவீன தொழில்நுட்ப சாதனங்களைப் பிழையான வழியில் பயன்படுத்துவதனால் ஏற்படும் சமூகச் சீரழிவு உள்ளிட்ட பல விடயங்கள் இந்த நாடகத்தில் எடுத்தியம்பப்பட்டன.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் வேண்டுகோளுக்கிணங்க அக்கரைப்பற்று இராமகிருஷ்ணமிசன் பாடசாலை மாணவர்கள் இந்த வீதி நாடகத்தினை நடத்தினர்.
இந்த நாடகத்தினை பாடசாலை மாணவர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கண்டுகளித்தனர்.
janoovar Friday, 09 December 2011 08:29 PM
அன்பார்ந்த மாணவர்களே முதலில் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு தமிழ் கற்றுக்கொடுங்கள் நான் உங்களுக்கு பாராட்டு விழா வைபவம் ஏற்பாடு செய்கின்றேன்.
Reply : 0 0
சிறாஜ் Saturday, 10 December 2011 05:38 AM
மக்காசின் ஜனூவர் உம்மை விட இங்க இருக்கும் உறுப்பினர்களுக்கு நன்றாகவே தமிழ் தெரியும் ஏனைய மொழிகளும் தெரியும். உமக்கென்ன நடந்தது என்று சொல்லும் பார்ப்போம்.
ஏன் தவிசாளருக்கு ஹிந்தி உறுது அரபிக் மலையாளம் ஆங்கிலம் சிங்களம் தமிழ். இப்படி இன்னும் எத்தனையோ மொழிகள் தெரியும் புரிந்து கொள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
8 hours ago