2025 ஜூன் 25, புதன்கிழமை

மாணவர்தின விழா

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 08 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவர்கள் ஒழுங்கு செய்திருந்த க.பொ.த. சாதாரணதர மாணவர்தின விழா நேற்று புதன்கிழமை கல்லூரியின் எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் பகுதித் தலைவர் ஏ.எம்.ஜெமீல் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர மேயர் கலாநிதி ஸிராஸ் மீராசாஹிப் பிரதம அதிதியாகவும்  கல்முனை வலய கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.ஏ .தௌபீக் கௌரவ அதிதியாகவும் கல்லூரி அதிபர் எம்.எம்.இஸ்மாயில் விசேட அதிதியாகவும் கலந்து  கொண்டனர்.
 
இம்முறை நடைபெறவுள்ள க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் சகல பாடங்களிலும் அதிதிறமைச் சித்தி பெறுகின்ற ஒவ்வொரு மாணவனுக்கும் தலா 50,000 ரூபா பணப்பரிசு தருவதாக வாக்குறுதி வழங்கிய கல்முனை மாநகர மேயரும் இக்கல்லூரியின் பழைய மாணவருமான கலாநிதி ஸிராஸ் மீராசாஹிப் கல்லூரிக்கு போட்டோ பிரதியெடுக்கும் இயந்திரம் கொள்வனவு செய்வதற்காக ஒரு இலட்சம் ரூபாவிற்கான காசோலையினை அதிபரிடம் ஒப்படைத்துள்ளார். அத்துடன், பழைய மாணவரொருவர் அதியுயர் பதவி வகிக்கும்போது கல்லூரியினால் வழங்கப்படும் அதியுயர் கௌரவமான  கல்லூரிக் கொடியினால் இவர் போர்த்தியும் கௌரவிக்கப்பட்டார்.


You May Also Like

  Comments - 0

  • kalmunaiyaan Friday, 09 December 2011 05:50 AM

    உங்களுடைய பண உதவிகளுக்கு ஒரு "ஜே"......வாழ்த்துக்கள் தலைவா.

    Reply : 0       0

    meenavan Saturday, 10 December 2011 12:24 AM

    அவமானம்,அவமானம், கற்பனையிலுள்ள அதி திறமை சித்திகளையும் நம்பி,ஒரு லட்சம் ரூபா காசோலைக்கு கௌவரமான கல்லூரி கொடியை விற்ற அதிபரும் ஆசிரியர்களும் வாழ்க.

    Reply : 0       0

    rahuman Saturday, 10 December 2011 08:39 PM

    வாழ்த்துக்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .