2025 ஜூன் 25, புதன்கிழமை

'சமகால அரசறிவியல் எண்ணக்கருக்கள்' நூல் வெளியீடு

Kogilavani   / 2011 டிசெம்பர் 08 , பி.ப. 01:06 - 1     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார், ஏ.ஜே.எம்.ஹனீபா)

சம்மாந்துறை சாந்தியில்ல வெளியீட்டகத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக விரிவுரையாளர் எஸ்.சர்ஜுன்,  தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் சமாதான கற்கைநெறிப்பிரிவின் சிறப்புப் பட்டதாரியுமான ஏ.எம்.றிபான்  ஆகியோர் எழுதிய 'சமகால அரசறிவியல் எண்ணக்கருக்கள்' எனும் நூல் வெளியீட்டு விழா இன்று வியாழக்கிழமை சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் அதிபர் கே.எம்.தசுல் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் கலந்து கொண்டதுடன், நூல் ஆய்வினை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தழிழ்த்துறைத் தலைவர் கலாநிதி றமீஸ் அப்துல்லா நிகழ்த்தினார்.

நூலின் முதற்பிரதியினை தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் ஏ.எம்.சஹீட் பெற்றுக் கொண்டார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள், மாணவர்கள், கல்விமான்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 1

  • r.dilagini Wednesday, 27 February 2019 04:53 PM

    book mikavum payan ullathaga irukkitathu athai anaivarum easy aga padipaathattgaga wep side ela download pannuvathai pooala saiya mudiyatha

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .