2025 ஜூன் 25, புதன்கிழமை

'தேசமான்ய' பட்டம் பெற்றமைக்காக புஸ்பகுமாருக்கு கௌரவம்

A.P.Mathan   / 2011 டிசெம்பர் 09 , மு.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அகரம் சமூக அமைப்பினால் கடந்த புதன்கிழமை அம்பாறை மாவட்ட ஜனாதிபதி ஆலோசகரும் பீடோ அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான கு.புஸ்பகுமாருக்கு பாராட்டு வைபவமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கையின் இரண்டாவது அதியுயர் விருதான 'தேசமான்ய' விருது அண்மையில் புஸ்பகுமாருக்கு வழங்கப்பட்டிருந்தது. இதனை பாராட்டி கௌரவிக்குமுகமாகவே மேற்படி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வானது அகரம் முன்பள்ளி பாடசாலை வளாகத்தில் அகரம் அமைப்பின் தலைவர் எஸ்.துஷாந்தன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தேசமான்ய கலாநிதி கு.புஸ்பகுமாருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் வாழ்த்துப்பா மாலையும் வழங்கப்பட்டது.

அன்றைய நிகழ்வின்போது அதிதிகளாக கல்முனை கல்வி வலய சிரேஷ்ட தமிழ் மொழிப்பாட ஆலோசகரும், ஓய்வுபெற்ற அதிபர்களும் புத்திஜீவிகளும் மற்றும் அகர அமைப்பின் அங்கத்தவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.


You May Also Like

  Comments - 0

  • Majeed Friday, 09 December 2011 12:44 PM

    பல்கலைக்கலகங்களில் கலாநிதிகள் தட்டுப்பாடாக இருக்கும்போது நீங்கள் எல்லாம் சிரேஸ்ட விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கூடாது?

    Reply : 0       0

    bis Friday, 09 December 2011 08:31 PM

    தேசமான்ய என்றால் என்ன?

    Reply : 0       0

    Birdeye Saturday, 10 December 2011 03:39 AM

    என்ன நடக்குது இங்க?....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .