2025 ஜூன் 25, புதன்கிழமை

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2011 டிசெம்பர் 09 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

திருக்கோவில் பிரதேசத்தில்; யுத்தத்தினால் இடம்பெயர்ந்த் 250மாணவர்களுக்கும் 5ஆம் தரம் புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்குமான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பிரதேசசெயலக மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

நற்பிட்டிமுனை பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் போராசிரியர் எம்.இராஜோஸ்வரனினால்
இக்கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.அழகரெட்ணம், பிரதேசதிட்டமிடல் உதவிப் பணிப்பாளர் வே.நவிரதன், தொழிலதிபர் போராசிரியர் எம்.இராஜோஸ்வரன், கிராம உதவி நிர்வாக உத்தியோகத்தர் இராஜரெட்ணம், ஆகியோர் கலந்துகொணடனர்.

இதன்போது, புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 50 மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன்; யுத்ததினால் இடம்பெயர்ந்த 200 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கபட்டன.


You May Also Like

  Comments - 0

  • hani Saturday, 10 December 2011 02:43 PM

    இவர் எந்த பல்கலை கழகத்தில் பேராசிரியர் பட்டம் பெற்றவர்? மன்னிக்கவும்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .