Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Kogilavani / 2011 டிசெம்பர் 09 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சம்புநகர் கிராமத்தில் குடிநீர், மின்சாரம் மற்றும் போக்குவரத்து வசதி போன்ற எதுவித அடிப்படைவசதிகளும் இன்றி வாழ்ந்துவரும் தமக்கு குறித்த வசிதிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை உரிய அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
சம்புநகர் மிகவும் பழைமை வாய்ந்ததொரு கிராமமாகும். தற்போது அங்கு சுமார் 100 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இருந்த போதும், இங்கு இதுவரை மின்சார வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. குழாய் நீர் விநியோகமும் வழங்கப்படவில்லை. கோடை காலங்களில் இங்குள்ள கிணறுகள் வற்றும் போது கிராம மக்கள் குடிநீருக்காக மிகவும் கஷ்டப்படுகின்றனர்.
இதேவேளை, பிரதேச செயலகம், பிரதேசசபை, வைத்தியசாலை மற்றும் அஞ்சல் அலுவலகம் போன்ற இடங்களுக்கு சம்புநகரிலுள்ள மக்கள் செல்வதாயின், சுமார் 5 கிலோமீற்றர் தொலைவிலுள்ள அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கே பயணிக்க வேண்டியுள்ளது. ஆனால், இதற்கான பஸ் சேவைகளும் இந்த மக்களுக்குச் செய்து கொடுக்கப்படவில்லை.
மேற்படி சம்புநகர் கிராமத்தில் 25 வீடுகளைக் கொண்ட அங்கவீனர்களுக்கான வீட்டுத் தொகுதியொன்று உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
சாதாரணமான மனிதர்களே, அடிப்படை வசதியின்றி வாழ்வதற்குக் கஷ்டப்படும் நிலையில், உடற்குறைபாடுகள் உள்ள மக்களின் நிலையினைப் புரிந்து கொண்டாவது, இக் கிராமத்துக்கு உரிய அடிப்படை வசதிகளை உடனடியாக வழங்க வேண்டுமென இப் பகுதி மக்கள் கோருகின்றனர்.
சம்புநகர் கிராமம் அடிக்கடி காட்டு யானைகளின் அச்சுறுத்தலுக்குள்ளாகும் கிராமம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
faroos Saturday, 10 December 2011 06:11 PM
பழமையான இக்கிராமத்தை புதுமையாக்க நினைத்து செய்தி வந்தது போதுமையா
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
8 hours ago