2025 ஜூன் 25, புதன்கிழமை

பாடப் புத்தகங்களை சிறப்பாக பயன்படுத்திய மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2011 டிசெம்பர் 09 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)
அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப் படும் பாடப் புத்தகங்களை பாதுகாப்பாகப் பயன்படுத்திய மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் ஏ.எல். கிதுறு முகம்மட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமக்கு இலவசமாக வழங்கப்பட்ட பாடப் புத்தகங்களை பாதுகாப்பாகவும், சிறப்பாகவும் பயன்படுத்திய மாணவர்கள் சான்றிதழ் வழங்கி  பாராட்டப்பட்டனர்.

கல்வித் திணைக்களத்தினூடாக, கல்வி அமைச்சு நடைமுறைப்படுத்தி வரும்  பாடசாலைப் பாடநூல்களைச் சிறப்பாகப் பயன்படுத்தும் வேலைத் திட்டத்துக்கமைவாகவே மேற்படி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அரசாங்கத்தினால் வழங்கப்படும் இலவசப் பாடநூல் ஒன்றினைப் சிறப்பாகப் பயன்படுத்துவதென்பதுஇ தேசிய சொத்தொன்றைப் பாதுகாப்பதற்காகப் பங்களிப்பு வழங்கியதாகக் கருதப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

                                                                                                                                                                                                                                                                                                                                               


You May Also Like

  Comments - 0

  • fai Saturday, 10 December 2011 06:30 PM

    நல்ல முயற்சி பாராட்டுக்கள்.

    Reply : 0       0

    a.ameen Sunday, 11 December 2011 01:47 AM

    ஆசிரியர்களுடைய பிள்ளைகளுக்கு மட்டுமா இது?

    Reply : 0       0

    inzith Monday, 12 December 2011 05:23 PM

    இது வழமைதானே

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .