2025 ஜூன் 25, புதன்கிழமை

அம்பாறை, பாணம பாடசாலைக்கு முதலமைச்சர் விஜயம்

A.P.Mathan   / 2011 டிசெம்பர் 10 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

கடந்த யுத்தம் மற்றும் வன்செயல் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட பாடசாலையாக அக்கரைப்பற்று வலய பாணம அ.த.க. பாடசாலை காணப்படுகின்றது.

குறித்த பாடசாலைக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நேற்று வெள்ளிக்கிழமை விஜயம் செய்திருந்தார்.

விஜயம் செய்த கிழக்கு மாகாண முதலமைச்சர், பாடசாலையின் குறைகளை கேட்டறிந்ததோடு அப்பாடசாலைக்கு 5 கணினிகள் மற்றும் பிரதியெடுக்கும் இயந்திரம் அடங்கலாக கணினி தொகுதியினை வழங்கி வைத்தார். கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் பாடசாலைகளுள் மேற்படி பாடசாலை ஓர் எல்லைப்புற பாடசாலையாக அமைந்து இருப்பதனால் அப் பாடசாலையின் அடிப்படை வசதிகள் இன்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது. மேற்படி நிலைமையை அறிந்து கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் அங்கு நேரடியாக விஜயம் செய்து அங்குள்ள குறைகளை கண்டறிந்ததோடு பாடசாலை சமூகத்துடன் கலந்துரையாடி பாடசாலை எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் 2012இல் உரிய தீர்வு வழங்கப்படும் என உறுதியளித்ததோடு அங்குள்ள மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்வித்தார்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன, அக்கரைப்பற்று வலையக்கல்வி பணிப்பாளர் திருமதி திகவதி கணேசமூர்த்தி அம்மையார், கோரளைப்பற்று அதிகாரி, பாடசாலையின் அதிபர் தயாபரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர் தேவராஜ் தெரிவித்தார். (படங்கள் : முதலமைச்சர் ஊடகப்பிரிவு)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .