2025 ஜூன் 25, புதன்கிழமை

திவிநெகும திட்டத்தின் கீழ் முட்டையிடும் கோழிக் குஞ்சுகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2011 டிசெம்பர் 10 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

திவிநெகும மணைப் பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட குடும்பங்களுக்கு ஒரு மாத அளவுடைய முட்டையிடும்  கோழிக் குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு இன்று நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரத்தினம் தலைமையில் நடைபெற்றது.
 
இந்நிகழ்வில் கோழி வளர்ப்புக்காக தெரிவு செய்யப்பட்ட 750 குடும்பங்களிலிருந்து முதல் கட்டமாக 250 குடும்பங்களுக்கு 10 முட்டைக் கோழிக் குஞ்சுகள் வீதம் மொத்தமாக 2500 குஞ்சுகள் வழங்கி வைக்கப்பட்டன.

ஏனைய 500 குடும்பங்களுக்குமான கோழிக்குஞ்சுகள் விரைவில் வழங்கப்படவுள்ளதாக பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரத்தினம் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உதவித் திட்டமிடல் பணிப்பாளர்களான திருமதி பாக்கிய ராஜா , கே.எல்.ஏ.ஹமீட், கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் கே.பொன்னம்பலம் உட்பட கிராம உத்தியோகத்தர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .