Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 டிசெம்பர் 11 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கல்முனை கல்வி வலயத்திலிருந்து அக்கரைப்பற்று மற்றும் சம்மாந்துறை வலயங்களிலுள்ள தூரப் பாடசாலைகளுக்கு 2009ஆம் ஆண்டு இரண்டு வருட ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்ட இடமாற்றத்தின் அடிப்படையில் சென்ற ஆசிரியர்களை மீண்டும் கல்முனை வலயத்திற்கு இடமாற்றம் செய்யுமாறு கோருவதற்கான கலந்துரையாடல் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பாதிக்கப்பட்ட ஆசிரியர் குழுக்களின் தலைவர் எம்.எம்.எம்.றபீக் தலைமையில்இக்கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன்போது தற்போது கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் மேலதிகமாகவுள்ள ஆசிரியர்களை வெளிமாவட்டங்களுக்கும் வேறு கல்வி வலயங்களுக்கும் இடமாற்றும் செய்யும் நடவடிக்கைகளில் பெரும் சர்ச்சையும் எதிர்ப்புகளும் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் ஏற்ன்கனவே ஒப்பந்த அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்ட 134 ஆசிரியர்களையும் இவ்விட மாற்றத்தில் உள்வாங்கி மீண்டும் கல்முனை கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் கடமை புரிய அனுமதிக்குமாறும் இவர்கள் கோரியுள்ளனர்.
இதற்கிடையில் ஏற்கனவே இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்கள் ஒரு சிலருக்கு மீண்டும் வேறு தூர பிரதேசங்களுக்கு இடமாற்றம் கிடைத்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாச்சுவது போலாகிவிட்டது.
கிழக்கு மாகாணத்தில் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில் அக்கரை செலுத்துவதற்காக கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் பாடசாலைகளிலுள்ள ஆசிரியர் சமமின்மையை போக்குவதற்காக புதிய புள்ளிமுறையொன்றை அறிமுகப்படுத்தி அதன் மூலம் ஆசிரியர்களை வலயத்திற்குள்ளும் மாவட்டத்திலுள்ள ஏனைய வலயங்களுக்கும் மாவட்டத்திற்கு வெளியிலும் இடமாற்றங்களை தற்போது வழங்கியுள்ளது.
இதில் ஆண் ஆசிரியர்களை விட பெண் ஆசிரியைகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகஷ்டப் பிரதேசம், கஷ்டப்பிரதேசம், வசதியான பாடசாலையென பாடசாலைகளை தரம் பிரித்துள்ள கல்வியமைச்சு, தூர இடங்களிலிருந்து மிகவும் கஷ்டங்களுக்கு மத்தியில் வசதியான பாடசாலைகளுக்கு செல்லும் ஆசிரியர்களுக்கும் அதிகஷ்டப்பிரதேச பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவுகளை வழங்கியிருக்குமேயானால் அதிகமான ஆசிரியர்கள் தமது விருப்பத்தின் பேரில் தூர இடங்களில் கடமையாற்ற சம்மதித்திருப்பார்கள்.
அரசாங்கம் பாடசாலைகளை தரம் பிரிப்பதனை விட ஆசிரியர் ஒருவர் தமது இருப்பிடத்திலிருந்து பாடசாலைக்கு செல்லும் தூரத்தினை அடிப்படையாக வைத்து அதற்கான மேலதிக கொடுப்பனவுகளை வழங்குமாறு இக்கலந்துரையாடலின்போது பிரேரணையொன்றும் சமர்பிக்கப்பட்டது.
மேலதிகமான ஆசிரியர்கள் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்படுவதனை தாங்கள் எதிர்க்கவில்லை. எதிலும் நியாயம் மற்றும் மனிதாபிமானம் இருக்க வேண்டுமென்பதாலும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டுமென்பதாலும் ஏற்கனவே கல்முனை வலயத்திலிருந்து தூர இடங்களுக்கு எந்தவித காரணமுமின்றி இடமாற்றம் பெற்ற ஆசிரியர்களை மீண்டும் கல்முனை வலய பாடசாலைகளில் இணைத்துக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட கல்வி திணைக்கள அதிகாரிகளை பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கேட்டுள்ளனர்.
sasi Monday, 12 December 2011 09:57 PM
இது எல்லாம் ஒரு பிரச்சனை அல்ல, உங்களை இடம் மாற்றியது கிழக்கு மாகாணத்துக்குள் தானே.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
8 hours ago