2025 ஜூன் 25, புதன்கிழமை

'பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்போம்' தொனிப்பொருளில் செயலமர்வு

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 12 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையுடன் சம்மாந்துறை பிரதேச செயலக சமூக பராமரிப்பு மையத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு 'பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்போம்' எனும் தலைப்பிலான செயலமர்வு இன்று காலை 10.30 மணிக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்  மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி பஸீலா அன்சார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.எம்.தௌபீக் கிராமசேவை நிர்வாக உத்தியோகத்தர் யூ.எல்.சலீம், தலைமை சமூர்த்தி முகாமையாளர் எம்.பி.எம்.ஹூசைன் உற்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் வன்முறைகள் தொடர்பான வீடீயோ காட்சிகளும் காண்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0

  • nazirahamed MN Monday, 12 December 2011 10:00 PM

    சம்மாந்துறையில் அவ்வளவு வன்முறையா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .