2025 ஜூன் 25, புதன்கிழமை

கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றங்களை இரத்துச்செய்ய வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 13 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

 

கிழக்கு மாகாணத்தில் தற்போது ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றங்களை உடனடியாக இரத்துச்செய்யுமாறு கோரி ஜனாதிபதிக்கும்  கிழக்கு மாகாண ஆளுநருக்கும் கிழக்கு மாகாண கல்வியமைச்சருக்கும் கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்திற்கும்  அவசரக் கடிதமொன்றை  கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிப்  அனுப்பி வைத்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் கல்வி வலயங்களுக்குள்ளும் வலயங்களுக்கு வெளியிலும் வெளிமாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள ஆசிரியர் இடமாற்றத்தினால் அதிகமான ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள், கல்வியியலாளர்கள் எவரையுமே கலந்தாலோசிக்காமல் ஆசிரியர்களின் மனிதாபிமான தேவைகளை கருத்திற்கொள்ளக்மலும் வலயத்திற்கு வலயம் வித்தியாசமான முறையில் புள்ளியிடப்பட்டு ஏற்படுத்தப்பட்டுள்ள இவ் இடமாற்றத்தினால் ஆசிரியர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விட மாற்றங்களை உடனடியாக இரத்துச்செய்து ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவும் பாடசாலைகளுக்கு புதிய ஆசிரியர்களை உள்வாங்கி அவர்களை நியமிக்குமாறும் மேயர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இவ் ஆசிரியர் இடமாற்றம் சம்பந்தமாக ஓரிரு தினங்களில் மேயர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து இந்த திட்டமிடாத இடமாற்றம் சம்பந்தமாக விரிவான விளக்கமொன்றினை வழங்கவிருப்பதாக மேயரின் ஆலோசகர் ஏ.பீர்முஹம்மட் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0

  • kulathooran Tuesday, 13 December 2011 05:47 PM

    மேயரின் ஆலோசகர், மேயருக்கு இது விடயத்தில் கூடிய பங்களிப்பினை செய்யமுடியும், ஜனாதிபதியின் சந்திப்பின்போதும் அவரை அழைத்து செல்லவும்.

    Reply : 0       0

    UMMPA Tuesday, 13 December 2011 07:44 PM

    முதல் உங்கள் பாராளுமன்ற உறுப்பினரின் அனுமதி பெற்றுகொள்ளுங்க பின் பத்திரிகைக்கு தெரிவியுங்கோ !
    வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    sivanathan Wednesday, 14 December 2011 04:52 AM

    மேயரே மாநகர அபிவிருத்தியில் கவனம் எடுக்கவும். மேலதிகமாக கல்முனயில் பலநூறு ஆசிரியர்கள் இருப்பது தங்களுக்கு தெரியாதது வேதனையளிக்கிறது.

    Reply : 0       0

    krish Wednesday, 14 December 2011 05:44 AM

    மாநகர அபிவிருத்தி என்பது கல்வி உட்படத்தான் நண்பரே , நீண்ட கால பிரச்சினைக்கு எப்படி உடனடி தீர்வு தர முடியாதோ அது போலதான் இந்த இடமாற்றமும். பொதுவான சுழற்ற்சி முறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் எல்லாருக்கும் சமமாக

    Reply : 0       0

    pasha Wednesday, 14 December 2011 06:47 PM

    இதற்கு சரியான தீர்வு தெரிவாகும் அனைத்து புது ஆசிரியர்களையும் பின் தங்கிய இடங்களில் நியமிப்பது தான்.

    Reply : 0       0

    zeefa Thursday, 15 December 2011 04:42 PM

    இதை பார்க்க எங்களது ஹரிஸ் எம்பி ஜமீல். ஜவாத் இருக்காங்க . நீங்க மாநகரை சுத்தபடுதுங்க. அழகு படுத்துங்க.

    Reply : 0       0

    zeefa Thursday, 15 December 2011 04:43 PM

    இது உங்களுக்கு வேண்டாம் இதை பார்க்க எங்களது ஹரிஸ் எம்பி ஜமீல் . ஜவாத் இருக்காங்க . நீங்க மாநகரை சுத்தபடுதுங்க. அழகுபடுத்துங்க ஓகே .

    Reply : 0       0

    maruthooran Friday, 23 December 2011 01:07 AM

    இது என்ன சின்னபுள்ளதனமா இருக்கு. மத்தவங்க முயற்சியில நானும் பங்கு எடுக்குற முயற்சிபோல. வேணாம் விட்டிடுங்க.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .