2025 ஜூன் 25, புதன்கிழமை

அம்பாறை மாவட்டத்தில் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு

Super User   / 2011 டிசெம்பர் 13 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அம்பாறை மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மரக்கறிகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவியது. இதனால் மரக்கறிச் சந்தைகள் வெறிச்சோடிக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புpளாஸ்ரிக் கூடைகளில் மரக்கறிகளைக் கொண்டு செல்ல வேண்டும் எனும் விதிமுறை அமுலானதையடுத்து வியாபாரிகள் மரக்கறிகளைக் கொள்வனவு செய்ய முன்வராமையே இந்தத் தட்டுப்பாட்டுக்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஒரு சில இடங்களில் மட்டும் மரக்கறிகள் அதிக விலைக்கு விற்பனையானதைக் காண முடிந்தது. சாதாரணமாக, நேற்று 30 ரூபாவிலிருந்து 40 ரூபா வரை விற்கப்பட்ட லீக்ஸ் 01 கிலோ - இன்று 200 ரூபாய்க்கும், நேற்று 130 ரூபாவுக்கு விற்பனையான போஞ்சி ஒரு கிலோ இன்றைய தினம் 200 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதேவேளை, இன்றைய தினம் சில்லறை விற்பனை நிலையங்கள் சிலவற்றில் - பச்சை மிளகாய் ஒரு கிலோ - ஆயிரம் ரூபாவுக்கு விற்பனையானதை அவதானிக்க முடிந்தது.

நுவரெலியா, பண்டாரவளை, தம்புள்ளை மற்றும் வெலிமடை போன்ற இடங்களிலிருந்து அம்பாறை மாவட்டத்துக்குத் தேவையான மரக்கறிகள் கொண்டுவரப்படுவது வழமையாகும்.

போஞ்சி, கரட், லீக்ஸ் மற்றும் பீற்றூட் போன்ற ஆங்கில மரக்கறிகளுக்கு இன்று அம்பாறை மாவட்ட சந்தைகளில் தட்டுப்பாடு நிலவியதால் - நாட்டு மரக்கறிகறிகளே இன்றைய சந்தையில் அதிகம் காணப்பட்டன.


You May Also Like

  Comments - 0

  • zeefa Thursday, 15 December 2011 04:55 PM

    பிளாஸ்டிக் பெட்டி நல்ல விடயம். அதற்காக மரக்கறி விலையை கூட்ட வேண்டாம். நாங்கள் பாவம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .