2025 ஜூன் 25, புதன்கிழமை

சட்டவிரோத மாடுகளை கொண்டுசென்ற இருவர் கைது

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 14 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அம்பாறை மாவட்டத்தின் சவளைக்கடை பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக  6
மாடுகளை கால்நடையாக கொண்டுசென்ற இருவர் அம்மாடுகளுடன் நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றையடுத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக சவளைக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.

வெல்லாவெளி பிரதேசத்திலிருந்து
நற்பிட்டிமுனை பிரதேசத்திற்கு  இந்த மாடுகளை
கால்நடையாக கொண்டுசென்றபோது  சவளைக்கடை தபாலக சந்தியில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .