Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Kogilavani / 2011 டிசெம்பர் 17 , மு.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார்)
சிவில் நிர்வாகத்தினை கட்டியெழுப்பும் நோக்கில் அம்பாறை மாவட்டத்தில் முதன் முறையாக பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையிலான 'சமூகப் பொலிஸ் சேவை' எனும் வேலைத்திட்ட விழிப்புணர்வு அங்குரார்ப்பண வைபவம் சம்மாந்துறை மலையடி கிராமத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆசிய பவுண்டேஷன் நிலையத்தின் அனுசரனையுடன் கெப்சோ நிறுவனம் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
சம்மாந்துறை மலையடிக்கிராம 'சப்னா' ஆங்கில பாலர் பாடசாலையின் சிவில் பாதுகாப்புக் குழுவின் தலைவர் வை.பி.எம்.இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்ஸூர், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜயந்த தஹநக, சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் தலைவரும், கெப்சோ நிறுவனத்தின் தலைவருமான ஐ.அப்துல் ஜப்பார், கெப்சோ நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் ஏ.ஜே. காமில் இம்டாட் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, கிராம மட்டத்தில் நிலவும் சமூக விரோத குற்றச் செயல்களை தடுப்பதற்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாகவும், பொலிஸாருக்கும், பொது மக்களுக்கும் இடையில் சிவில் பாதுகாப்புக் குழுவின் உதவியோடு நல்லுறவினை எற்படுத்துவது தொடர்பாகவும் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
சிவில் பாதுகாப்புக் குழுவின் அங்கத்தவர்கள், கிராம சேவையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
7 minute ago
21 minute ago
2 hours ago