Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 டிசெம்பர் 19 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பெரிய உல்லை பிரதேசத்தில் கஞ்சா வைத்திருந்த நபரொருவரை எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஏ.எல்.எம். ஹில்மி உத்தரவிட்டுள்ளார்.
மேற்படி நபர் இன்று திங்கட்கிழமை பொத்துவில் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஏ.எல்.எம்.ஹில்மி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே, நீதவான் இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றையடுத்து பெரியஉல்லை பசறிச்சேனை பிரதேசத்தில் கஞ்சா வைத்திருந்தாரென்ற குற்றச்சாட்டின் பேரில் நேற்று ஞாயிற்றுக்கிமை மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டதுடன், 10 கிராம் கஞ்சாவும் அவரிடமிருந்து மீட்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
12 minute ago
20 minute ago
2 hours ago