Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 டிசெம்பர் 20 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
அட்டாளைச்சேனை பிரதான வீதியில் முற்றாக மூடப்பட்டு மண்ணுள் புதைந்து கிடந்த வடிகான்களைத் தோண்டுவதோடு, மழை மற்றும் வெள்ள நீர் வடிந்தோடுவதற்குத் தடையாக இருந்த கட்டிடங்களின் சில பகுதிகளை அகற்றும் பணிகள் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது.
அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்ட மேற்படி நடவடிக்கையினை சபைத் தவிசாளர் ஏ.எல்.எம்.நசீர் நேரடியாகச் சென்று பார்வையிட்டதோடு, வேலைகளையும் நெறிப்படுத்தினார்.
தற்போது பெய்து வரும் மழை காரணமாக அட்டாளைச்சேனைப் பிரதேசத்தின் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதாகவும், மழைநீர் வடிந்தோட முடியாத நிலை உள்ளதாகவும் தவிசாளரிடம் பொதுமக்கள் முறையிட்டிருந்தனர்.
இதனையடுத்தே மூடப்பட்டுக் கிடந்த வடிகான்களைத் தோண்டுதல் மற்றும் நீர் வடிந்தோடுவதற்குத் தடையாக இருந்த கட்டிடங்களின் சில பகுதிகளை அகற்றும் பணிகள் இன்று மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் உறுப்பினர் எஸ்.எல்.முனாஸும் அங்கு சமூகமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நண்பன் Tuesday, 20 December 2011 10:11 PM
வாழ்த்துக்கள்.
Reply : 0 0
sinasudeen Wednesday, 21 December 2011 01:39 AM
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
Reply : 0 0
nanpan, add Wednesday, 21 December 2011 05:23 PM
உங்கள் சேவை தொடரட்டும்..
Reply : 0 0
safa Wednesday, 21 December 2011 06:17 PM
நல்ல வேலை செய்தீர்கள் நசீர் மிக்க நன்றி...
மேலும் இதை தற்காலிகமாக செய்து விடாமல் ஒரு நிரந்தர வடிகான் அமைத்து தந்தாள் இன்னும் உதவியாக இருக்கும்... வாழ்த்துக்கள்.
Reply : 0 0
suresh Wednesday, 21 December 2011 07:25 PM
வடிகால் தோண்டுறதெல்லாம் பெரிசா தெரியுற நம்மடவங்களுக்கு வடிகால் அமைக்கிறததெல்லாம் தெரியாதாக்கும். பத்திரிகை தர்மம் பொதுவானது.
Reply : 0 0
ஹனீக் அஹமட் Wednesday, 21 December 2011 10:16 PM
Suresh, அட்டாளைச்சேனையில் அமைக்கப்பட்டுள்ள வடிகான்கள் பற்றியும், அவற்றின் லட்சணங்கள் பற்றியும் நிறையவே எழுதியிருக்கிறோம். குறித்த செய்திகளின் தொடுப்புகள் இவை. நிதானத்துடன் வாசியுங்கள்!
http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-15-09/29055-2011-10-07-09-04-37.html
http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-15-09/15720-2011-01-30-08-36-14.html
Reply : 0 0
zarjoon Thursday, 22 December 2011 05:48 AM
சம்புக்கலப்பு வடிச்சல் பற்றி எழுதும் போது அமைச்சர்களின் பெயர்களை முழிசாக முளுங்கி எழுதினீர்கள்.
அண்மையில் சிரமதானத்திலும் முதலைபிடித்தது அவரின் பெயரை இது ஊடக தர்மமா? தான் சார்ந்த பக்கம் மட்டும் சார்ந்து எழுதுவதை குறையுங்கள்.
Reply : 0 0
suresh Thursday, 22 December 2011 11:12 PM
ஹனீக் அஹமட் உங்களுடைய எல்லா தொடுப்புகளையும் வாசித்தேன் நன்றி. அட்டாளைச்சேனையின் பெரும்பான்மையான மக்கள் பக்கம் உங்கள் கருத்துகள் இழையோடி இருக்கின்றன. பத்திரிக்கை என்பது பெரும்பான்மையை விடுத்து நியாயங்களை சொல்ல வேண்டியதல்லவா.... சம்புக்கலப்பு வடிச்சல் கான் இப்பிரதேசத்தவர்களுக்கு வரம் அல்லவா..? தாங்கள் இந்தப்பிரதேசத்தின் பெறுமதியான பத்திரிகையாளர் நீங்கள் நல்ல விமர்சனமாக தீர்வுகளையும் எழுதலாமே.........
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
13 minute ago
27 minute ago
2 hours ago