2025 ஜூன் 25, புதன்கிழமை

கல்முனை பிரதேசமட்ட சிவில் பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் கூட்டம்

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 22 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

கல்முனை பிரதேச மட்ட சிவில் பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் கூட்டம் கல்முனை பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

கிராமப் பிரிவுகளில் காணப்படும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள், பிரதேச சுகாதார மேம்பாடு,  டெங்கொழிப்பு நடவடிக்கைகள், பிரதேசத்தின் வீதி மற்றும் போக்குவரத்து ஒழுங்கு விதிகள்,  கட்டாக்காளி மாடுகளின் அதிகரிப்பினால் ஏற்படும் விபத்துக்கள், வடிகான் வசதி சீரின்மையால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு போன்ற குறைபாடுகள் தொடர்பில் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டன.  

கல்முனை பொலிஸார், கல்முனை பிரதேச செயலகம், கல்முனை மாநகரசபை ஆகியன இணைந்து குழுக்கள் அமைத்து இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்  கல்முனை பொலிஸ் பொறுப்பதிகாரி சிரான் பெரேரா, கல்முனை மாநகர முதல்வர் எம்.எஸ்.சிராஸ், அரசாங்க அதிகாரிகள், பொதுவமைப்புக்களின் பிரதிநிதிகள், பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொன்டனர்.


You May Also Like

  Comments - 0

  • Thankarasa Thursday, 22 December 2011 04:53 PM

    அதுசரி , USHA இக்கு என்ன வேலை இங்கு ...................

    Reply : 0       0

    jowsi Friday, 23 December 2011 01:30 AM

    எங்கேயும் காணி கிடந்தால் அடைப்பதற்கு

    Reply : 0       0

    kalmunaiyaan Friday, 23 December 2011 01:52 AM

    சரியான கேள்வி "தங்கராசா"

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .