2025 ஜூன் 25, புதன்கிழமை

ரம்புக்கன் ஓயா நீர்ப்பாசன திட்டம் எதிர்வரும் ஜுன் மாதமளவில் நிறைவடையும்

Kogilavani   / 2011 டிசெம்பர் 24 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)
அம்பாறை மகாஓயா பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ரம்புக்கன் ஓயா நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டம் அடுத்த ஆண்டு ஜூன் மாதமளவில் முடிவடையவுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மஹிந்த சிந்தனை  வேலைத் திட்டத்தின் கீழ் 2500 மில்லியன் ரூபாய் செலவில்  மேற்கொள்ளப்பட்டு வரும் மேற்படி அபிவிருத்தித் திட்டம் கடந்த 2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.  இத்திட்டம் யுத்தம் சில காலம் காரணமாக தடைப்பட்டிருந்தது.

1300 மீற்றர் நீளமும், 35 மீற்றர் உயரமும் கொண்ட பாரிய அணைக்கட்டு நிர்மாணிக்கப்பட்டு வருவதுடன், இதன் நிர்மாணப்பணிகளின் 90 வீதமான வேலைகள் நிறைவடைந்துள்ளன.

அணைக்கட்டின் வான்கதவுகளின் வேலைகளும் நிறைவடைந்துள்ளது. ரம்புக்கன் ஓயா நீர்ப்பாசனத் திட்டம்; அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் தலா 400 ஹெக்டெயர் நிலப்பரப்பில் அமைக்கப்படுவதுடன், உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன்மூலம் பல்லாயிரக் கணக்கான விவசாயிகள் நன்மையடையவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .