Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Super User / 2011 டிசெம்பர் 26 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஆர். அஹமட்)
நிந்தவூர் பிரதேச சபையின் 2012ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தினைத் தோற்கடிப்பதன் மூலம் கட்சியின் தலைமைத்துவத்திற்கு இழுக்கை ஏற்படுத்த முனைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமா? என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் தன்னை அடி பணிய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்து மூக்குடைபட்ட நிலையில் பொய்யான குற்றச்சாட்டுக்களை நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் முன்வைத்துக் கொண்டிருப்பதாகவும் எம்.ஏ.எம்.தாஹீர் குறிப்பிட்டுள்ளார்.
நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீர் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள கருத்துக்கள் தொடர்பில், எம்.ஏ.எம்.தாஹீர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
'என்னை பிரதேச சபை தேர்தலின் போது தோற்கடிப்பதற்காக இல்லாத பொல்லாத செயற்பாடுகளில் நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் ஈடுபட்டார்.
எனினும் அவரால், தான் நினைத்ததை சாதித்துக் கொள்ள முடியவில்லை. இதன் பின்னர் முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்திடம் என்னை தவிசாளராக நியமிக்கக் கூடாதென்று தலைமைத்துவத்திற்கு அழுத்தங்களைக் கொடுத்தார். இதனை கட்சி தலைமை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனை தொடர்ந்து எனக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அந்த வகையில் தான் நிந்தவூர் பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களை தமது இல்லத்திற்கு வரவழைத்து, எமது சபையின் 2012ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தை தோற்கடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
இச்சந்தர்ப்பத்தில் எமது பிரதேச சபையின் உறுப்பினர்கள் இது ஒரு உட்பூசல் என்பதனைக் கருத்தில் கொண்டு கட்சியினதும் தலைமைத்துவத்தினதும் நற்பெயரை பாதுகாத்துக் கொள்வதற்காக நிந்தவூர் பிரதேச மக்களின் நலனுக்காகவும் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்கள்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர் வை.எல்.சுலைமாலெப்பை வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த போதும் எமது கட்சியை சேர்ந்த பிரதி தவிசாளர் எம்.எம்.அன்சார் மற்றும் எம்.ரீ.ஏ.ஜப்பார் அலி ஆகியோர் எதிராக வாக்களித்தமை கட்சியின் வரலாற்றில் அழிக்க முடியாத பதிவாகும்.
முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளர் கட்சியின் ஆளுகைக்குட்பட்ட நிந்தவூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்தை தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக தோற்கடிக்குமாறு உறுப்பினர்களை பணித்திருந்தமை கட்சியின் மீது அவர் எந்தளவு விசுவாசத்தினை வைத்திருக்கின்றார் என்பதனை தெளிவுபடுத்துகின்றது.
கட்சியும் தலைமையும் அவமானப்பட்டாலும் பரவாயில்லை, தனது எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள வரவு செலவு திட்டத்தை பயன்படுத்த முற்பட்டமை இவரது வங்குரோத்து அரசியலுக்கு நல்லதொரு உதாரணமாகும்.
இவர் ஊடகங்களில் தான் ஊழல் புரிந்திருப்பதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பணத்தின் மூலம் வெற்றி பெற்றதாகவும் கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கட்சியின் தலைமையினால் போடப்பட்ட பிச்சை எனவும் நான் நிந்தவூர் பிரதேச சபையின் 2012ஆம் ஆண்டிற்கான வரவு- செலவுத் திட்ட விவாதத்தின் போது உரையாற்றியதாக கூறியிருக்கின்றார்.
இவ்வாறு நான் உரையாற்றவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமினால் அதனை நிரூபிக்க முடியுமா?;
பிரதேச சபை அமர்வின் ஒலிப்பதிவு நாடாவை கட்சியின் தலைமையிடம் சமர்ப்பிக்கவிருக்கின்றேன். கோள் சொல்கின்றவர்களின் கட்டுக் கதைகளை செவிமடுத்து அவர் தனது அரசியலில் பின் நோக்கிச் செல்லுகின்றார்.
அவரின் பொய்யான குற்றச்சாட்டுக்கள் பற்றி நான் பேசாது இருந்து வந்ததனை எனது பலவீனமாக நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் கருதக்கூடாது.
கடந்த பிரதேச சபை செயற்பாடுகள் யாவற்றிலும் என்னோடு சேர்ந்து செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், பல சந்தர்ப்பங்களில் பகிரங்கமாக பாராட்டியும் புகழ்ந்தும் பேசியுள்ளார்.
அப்போதெல்லாம் நேர்மையாளனாக அவரது கண்ணுக்கு தெரிந்த நான் இப்போது மட்டும் ஊழல்வாதியாகவும் அதிகார துஷ்பிரயோகம் செய்பவராகவும் தென்படுவது அவரின் தேர்தல் கால வெற்றிக்கு நான் உழைத்தற்கு கிடைத்த பரிசா என்று கட்சியின் ஆதரவாளர்களிடம் கேட்கின்றேன்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்தது. இதனால் தானொரு அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஊரிலுள்ள பள்ளிவாசலகளின் தலைவர்கள், பொது அமைப்புக்களின் தலைவர்களை ஒன்று கூட்டி அரச தரப்புக்கு மாறுவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு மக்களை அணி திரட்டி கட்சிக்கும் தலைமைக்கும் அழுத்தத்தினைக் கொடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் என்னிடம் கேட்டுக் கொண்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அரச தரப்புக்கு மாற வேண்டுமென்பதற்காக தற்போதைய பிரதி தவிசாளர் மற்றும் தனியார் வங்கியொன்றின் முகாமையாளர் ஆகியோரினது ஏற்பாட்டில் கடந்த 2010 மே 7ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் இரு கூட்டங்கள் கூட்டப்பட்டு தோல்வியில் நிறைவடைந்தனை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
எமது கட்சிக்கும் தலைமைத்துவத்துவத்துக்கும் கட்டுப்பட்டு நடப்பததை தவிர என்னால் கட்சிக்கு துரோகமிழைக்கும் செயல்களை செய்ய முடியாது என்பதை சுட்டிக் காட்டினேன்.
அப்போது அவர் என்னோடு கடுகடுத்துக் கொண்டார். அதற்கு நான் அடிபணியவில்லை. அன்றிலிருந்து என்னை எப்படியும் அரசியலிலிருந்து ஒதுக்கி விடுவதற்கு முயற்சிகள் எடுத்து வருவது முழு நிந்தவூர் பிரதேசமும் அறியும்.
2012ஆம் ஆண்டிக்கான வரவு - செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டிருக்குமாயின் முஸ்லிம் காங்கிரஸிற்கும் அதன் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கிமிற்கும் நாட்டிலுள்ள எல்லா அரசியல் சக்திகளிடமும் தலை குனிவை ஏற்படுத்தி இருக்கும்.
இத்தகைய துரோகச் செயலில் ஈடுபட்ட கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பைசால் காசிமிற்கும் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்த உறுப்பினர்களுக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை கட்சி எடுக்குமாவென்று கட்சியின் ஆதரவாளர்கள் என்னிடம் கேட்கின்றார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் பதவியிலிருந்து என்னை இல்லாமல் செய்யும் வரை தனது முயற்சியை மேற்கொண்டே இருப்பார் என்பதனை கட்சியின் ஆதரவாளர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன். இவரின் இவ்வாறான நடவடிக்கைகள் மல்லாக்கப்படுத்துக் கொண்டு மேல் நோக்கி துப்புவதற்கு சமனாகும்.
Thankarasa Tuesday, 27 December 2011 02:33 AM
என்ன தம்பி போட்டியா..................... நாறுது ............
Reply : 0 0
fazil Tuesday, 27 December 2011 02:53 AM
mr.பைசல் காசிம். தாகிர் . சின்னபுள்ள அரசியல் வேண்டாம். மு.கா. மெம்பெர்.
Reply : 0 0
அவதானி Tuesday, 27 December 2011 06:15 AM
ஒரு விடயம். நான்தான் பெரிய ஆள் என்னும் கேவலமான எண்ணம் இருக்கும் வரை யாரும் முன்னேற முடியாது.
Reply : 0 0
சிறாஜ் Tuesday, 27 December 2011 06:18 AM
ஒற்றுமையாக இருங்கள் அதுதான் நல்லது....
Reply : 0 0
Doc - KSA Tuesday, 27 December 2011 08:01 AM
Fantastic, Let's wait till the leadership awake....
Reply : 0 0
jowsi Tuesday, 27 December 2011 12:51 PM
இருவரும் நல்லா இருந்தவர்கள். என்னே நடந்ததோ?
Reply : 0 0
meenavan Tuesday, 27 December 2011 02:38 PM
பதவிக்கு தகுதியற்றோரும், சுயநல நோக்குள்ளோரும், சமுக சிந்தனை அற்றவர்களும் ,மு.கா.என்ற லேபலில் வருவதற்காக நாம் தெரிவு செய்வதை தவிர்க்கும் வரை இதே நிலைதான், நீங்கள் உங்களை மாற்றி கொள்ளாதவரை இறைவனும் உங்களில் மாற்றத்தை ஏற்படுத்தமாட்டான்.
Reply : 0 0
Dr.Rumi London Tuesday, 27 December 2011 03:03 PM
Cassim was a honest man when he was studying with me. He can cross over if he wants, but he should not have gone too low like this to defeat the budget which is against the will.
Reply : 0 0
UMMPA Tuesday, 27 December 2011 07:11 PM
இது மிகவும் அழகாக இருக்கிறது. முஸ்லிம் காங்கிரஸ் தலைவரே உங்கள் பதில் என்ன ? யார் சரி, யார் பிழை என்பது மக்களுக்கு தெரியவேண்டும்.
Reply : 0 0
Mr.athamlebbe Tuesday, 27 December 2011 09:03 PM
ஒரு கட்டத்தில் பைசல் காசிமுடன் கீரியும் பாம்புமாக இருந்த ஹசன்அலி + ஜப்பார்அலி இன்று பைசல் காசிமுடன் அன்பாக இருப்பதாகக் காட்டிக் கொள்வது ஏன்தான் பைசல் காசிமுக்கு புரியவில்லை?
Reply : 0 0
mohamed rinas Tuesday, 27 December 2011 09:25 PM
தவிசாளர் தற்போதைய நா.உருப்பினருக்கு போட்டியாக வந்திடுவார் போலும். நடக்கட்டும் போர் .............
Reply : 0 0
ameen Wednesday, 28 December 2011 05:14 PM
ஊரை முன்னேற்றுங்க.
Reply : 0 0
jaleel Wednesday, 28 December 2011 07:55 PM
இதில் இவர்கள் இருவரிலும் எந்த வித பிழைகள் சொல்ல முடியாது. இதுவரை ஊருக்கு இவர்களால் எந்த பயனும் நடந்ததில்லை. இதில் ஓட்டு போட்ட மக்களைத்தான் என்னால் குறை கூற முடியும். மக்கள் உணரும் வரை இந்த பிரச்சனைக்கு ஒரு போதும் தீர்வு கிடையாது.
Reply : 0 0
najath Friday, 30 December 2011 03:27 AM
ஏன் உங்களுக்கு இந்த கொலவெறி
Reply : 0 0
ansar Friday, 30 December 2011 07:57 PM
உங்களுக்கு வாக்களித்த மக்களை ஏமாற்றாதீர்கள்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
10 minute ago
24 minute ago
2 hours ago