2025 ஜூன் 25, புதன்கிழமை

அக்கறைப்பற்று பொலிஸ் நிலையத்துக்கு நிரந்தரக் கட்டிடத்தை பெறுவதற்கு நடவடிக்கை

Kogilavani   / 2011 டிசெம்பர் 31 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)
அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்துக்கு நிரந்தரக் கட்டிடமொன்றைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதோடு, நிலையத்தின் பௌதீக வளப் பற்றாக்குறைகளை முடியுமானவரை நிவர்த்தி செய்து தருவதாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேன உறுதியளித்துள்ளார்.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திற்கு நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன விஜயம் செய்து அங்குள்ள பௌதீக மற்றும் ஆளனி குறைபாடுகளைக் கேட்டறிந்து கொண்டதோடு, பொலிஸ் நிலையத்தையும் சுற்றிப் பார்வையிட்டார்.

இதன்போது, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்துக்கான நிரந்தரக் கட்டிடமொன்று இல்லாத குறையை ஜனாதிபதியின் நேரடிக் கவனத்திற்கு கொண்டு வந்து  பொலிஸ் நிலையத்திற்குரிய நிரந்தர இடமொன்றை பெறுவது தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

மேற்படி சந்திப்பின் போது, அக்கரைப்பற்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கே.கே. இந்திக்க சில்வா, பதில் பொலிஸ் நிலைய் பொறுப்பதிகாரி எம்.கே. இப்னு அசார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



                                


 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .