2025 ஜூன் 25, புதன்கிழமை

வட்டியில்லா கடனூடாக வாகனங்கள் வழங்கும் நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 01 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

விவசாய அபிவிருத்தி நிறுவனமும் விவசாய அபிவிருத்திக் கம்பனியும் இணைந்து நடுத்தர வர்க்க குடும்பங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும்  வர்த்தகர்களுக்கு சேவை நோக்குடன் இலகு தவணை வட்டியில்லா கடன் வசதியினூடாக வாகனங்கள் வழங்கும் நிகழ்வு கல்முனையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

2 டிரைக்டர் வண்டிகள், 10 முச்சக்கர வண்டிகள், 35 மோட்டார் சைக்கிள்கள் ஆகியன இவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டன.

விவசாய அபிவிருத்தி நிறுவனம், விவசாய அபிவிருத்திக் கம்பனி ஆகியவற்றின் தலைவர் கலாநிதி எஸ்.தில்லயநாதன் தலைமையில் வாகனங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு நடைபெற்றது.  சேனைக்குடியிருப்பு வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி எஸ்.லோகநாதன், கல்முனை பொலிஸ் பதில் பொறுப்பதிகாரி எஸ்.எம்.ஸதாத், தேசிய கணக்கு பரிசோதகர் எஸ்.காறூன் றஸீட் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .