2025 ஜூன் 25, புதன்கிழமை

நாவிதன்வெளி பிரதேச செயலாளர் கடமையை பொறுப்பேற்பு

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 02 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

நாவிதன்வெளி பிரதேச செயலாளராக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் நியமனம் செய்யப்பட்ட  அக்கரைப்பற்றைச் சேர்ந்த சுப்பிரமணியம் கரன் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது கடமையை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

நாவிதன்வெளி பிரதேச செயலாளராக இதுவரை காலமும் கடமையாற்றி வந்த கலாநிதி எம்.கேபாலரத்தினம் திருக்கோவில் பிரதேச செயலாளராக இடமாற்றம் பெற்றுச் சென்றதையடுத்தே சுப்பிரமணியம் கரன் நாவிதன்வெளி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பொருளாதார சிறப்புப் பட்டதாரியான சுப்பிரமணியம் கரன்  பொதுநிர்வாகத்துறையில் முதுமாணிப்பட்டத்தையும் பெற்றுள்ளார்.

2003ஆம் ஆண்டு நிர்வாக சேவையில் இணைந்துகொண்ட இவர் ஆலையடிவேம்பு, திருக்கோவில் பிரதேசங்களில்  பிரதேச செயலாளராக கடமையாற்றி பின்னர் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளராக கடமையாற்றியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, நாவிதன்வெளி பிரதேச செயலாளராக 12 வருடங்கள் கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச்செல்லும் கலாநிதி எம்.கோபாலரத்தினத்தை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சொறிக்கல்முனை – 02, வீரச்சோலை கிராம மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு   வீரச்சோலை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் கே.மதியழகன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலாநிதி எம்.கோபாலரத்தினம், கிராமசேவை நிர்வாக உத்தியோகத்தர் கே.பொன்னம்பலம், கிராம உத்தியோகத்தர் எம்.நடராஜா, சமுர்த்தி உத்தியோகத்தர் ஈ.இனோசன்சியா, குருக்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • Majeed Monday, 02 January 2012 10:18 PM

    கலாநிதி ஹ? ஹ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .