Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Menaka Mookandi / 2012 ஜனவரி 02 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
அக்கரைப்பற்று பிரதேச வெற்றுக்காணி ஒன்றில் கிடந்த கைக்குண்டு ஒன்றை பந்து என எண்ணி எறிந்து விளையாடிய போது அது வெடிப்புக்குள்ளானதில் சிறுவனொருவன் உயிரிழந்ததுடன் மற்றுமொரு சிறுவன் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
பதூர்நகர் பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள வெற்றுக் காணியில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் பதூர்நகரைச் சேர்ந்த நிலாஸ் (12 வயது) என்ற சிறுவனே உயிரிழந்தவனாவான். அதே பிரதேசத்தைச் சேர்ந்த இக்கினாஸ் (வயது 16) என்ற சிறுவன் படுகாயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சிறாஜ் Monday, 02 January 2012 11:35 PM
அக்கரைப்பற்றில் இந்த இரும்பு பந்து இன்னும் கிடக்குமோ பயமா இருக்கு பிள்ளைகளை விளையாட விடுவதற்கும் ..............
Reply : 0 0
easternbrother Tuesday, 03 January 2012 02:52 AM
பதூர்நகர் பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள வெற்றுக் காணியில் எப்படி கைக் குண்டு வந்தது......?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
20 minute ago
2 hours ago