Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Super User / 2012 ஜனவரி 02 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
புதிய கட்டிடத்துக்கு இடமாறியுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபைக் காரியாலயத்தினை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல்.எம்.நசீர் - புதிய காரியாலயத்தினை இன்று திறந்து வைத்தார்.
அட்டாளைச்சேனை கூட்டுறவு சங்கக் கட்டிடத்தில் இயங்கி வந்த பிரதேச சபை காரியாலயமானது, அட்டாளைச்சேனை பிரதான வீதியிலுள்ள கலாசார மண்டப கட்டிடத்துக்கு இடம்மாற்றப்பட்டுள்ளது.
புதிய காரியாலயத்தைத் திறந்து வைத்ததன் பின்னர் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு தவிசாளர் நசீர் பேசுகையில்ளூ
'கலாசார மண்டபம் எனும் பெயரில் சிலரால் அமைக்கப்பட்ட இந்தக் கட்டிடமானது, எந்த விதத்திலும் அதற்கு பொருத்தமற்றது. அதனால் தான், நிர்மாணிக்கப்பட்டதிலிருந்து இதுவரை இந்த மண்டபம் பயன்பாடின்றி கிடந்தது. எனினும், இதனை சீர்படுத்தி – தற்போது பிரதேச சபைக்கான காரியாலயமாக மாற்றியுள்ளோம்.
மக்கள் இலகுவாகவும், மக்களை இலகுவாகவும் தொடர்பு கொள்வதற்கு வசதியானதொரு இடத்தில் இந்தக் கட்டிடம் அமைந்துள்ளது. அதனாலேயே - இங்கு பிரதேச சபையினைக் கொண்டு வந்தோம்.
புதியதொரு வருடத்தில் - நமது பிரதேச சபைக் காரியாலயமானது புதியதொரு இடத்தில் இயங்கத் தொடங்கியுள்ளது. இந்த மாற்றங்கள் இங்குள்ள உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் செயற்பாடுகளில் மேலும் புதிய உத்வேகத்தினை ஏற்படுத்தும் என்பது எனது நம்பிக்கையாகும்' என்றார்.
இந் நிகழ்வில், அட்டாளைச்சேனை பிரதே சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
jpulm Wednesday, 04 January 2012 06:10 PM
nawaas
amaichar innum maarkat kaddidam enru ondu kaddalla
kaddinaal sariyaana thoora noakkoduthaan seywaar.
Reply : 0 0
Suresh Thursday, 05 January 2012 09:12 PM
எல்லாரும் கிழிச்ச கிளிப்புத்தான் இன்னமும் தைக்க முடியாம ஓடுது. தங்கங்களே நாளை என்பதோ, சமுகம் என்பது நம்மட தலைமைகளுக்கு தெரியாத வசனம். இதுல சிலவங்க சரி புல, அவங்க காலங்கடத்துறாங்க நாம ...??? ஐயோ ஐயோ
Reply : 0 0
ooraan Thursday, 05 January 2012 04:31 PM
"நல்லவன் அரசியலுக்கு வருவதும் இல்லை வந்தால் அவன் நல்லவனும் இல்லை" இதுல எங்கயாவது ஒண்டு தப்பி தவறி வந்து இருக்கும் ....அதுல ஒருத்தன் நல்லது செய்தால் அதை ஏன் கெடுக்க பர்கேங்க ....முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஊரையும் நம்முட ஊரையும் ஒப்பிட்டு பாருங்க ....நம்கிட்ட எல்லாம் இருக்கு ஆனா ஒண்டும் உருப்படியா இல்லை ...
Reply : 0 0
zaro Thursday, 05 January 2012 03:48 AM
ஊரான் உங்களுக்கு விளங்கியது நம்முட சனங்களுக்கு விளங்கல்ல பாருங்க
Reply : 0 0
senaiyuraan Wednesday, 04 January 2012 10:07 PM
சிராஜ் மாடுகள் படுக்கயாவது ஒரு கட்டிடம் அட்டாளைச்சேனையில் அவர்கள் கட்டினார்கள். சரி
நாங்க நூறு வீதம் தலைகீழாக நின்று வாக்குப்போட்டவங்க ஒரு கோழிக்கூடேனும் கட்டவில்லையே. இரண்டு முறை கல்லிற்கு மேல் கல்லு வைத்தார்கள் பல வருடங்களாகியும் ஒன்றையும் காணவே இல்ல ராசா.
Reply : 0 0
zarjoon Wednesday, 04 January 2012 09:38 PM
நம்முட ஏசி பள்ளிக்கு பக்கத்திலையும் அமைச்சர் அதாவுல்லாவினால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு மண்டபம் இருக்கு என்பதை மறந்து விட்டாரோ தெரியல்ல. அதையும் கொஞ்ச்சம் தமிழ் மிரர் ஊடாக வெளியிட்டால் நல்லம் என்று நினைக்கின்றேன் பக்கச்சார்பு இல்லாமல் நடுநிலையாக நின்று எழுதுங்கள். அவர் விட்டாலும் நமது தலைவர் கூட செய்யவில்லை என்பதயும் சேர்த்து எழுதுங்கள் ஊரின் நலனுக்காக ஒன்று சேர்ந்து நடு நிலையாக செய்யுங்கள்.
Reply : 0 0
zarjoon Wednesday, 04 January 2012 09:33 PM
அட்டாளைச்சேனையின் ஆயிரம் கால் மண்டபம் அன்று (நான்கு வருடங்கள் முன் ) கலாச்சார மண்டபத்தில் பிரதேசசபை இன்று லேட்டானாலும் லேடஸ்தான்.
அதுசரி மப்ரூக் நானா நம்முட ஏசி பள்ளிக்கு பக்கத்திலையும் அமைச்சர் அதாவுல்லாவினால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு மண்டபம் இருக்கு என்பதை மறந்து விட்டாரோ தெரியல்ல. அதையும் கொஞ்சம் தமிழ் மிரர் ஊடாக வெளியிட்டால் நல்லம் என்று நினைக்கின்றேன்.
Reply : 0 0
zarjoon Wednesday, 04 January 2012 09:22 PM
மின்வர் அவர்களே
அமைச்சர் எம் .எஸ். உதுமாலெப்பை வாக்குக்காக பணம் கொடுத்து சத்தியம் வாங்கவில்லை.
காய்கின்ற மரத்திட்குத்தான் கல்லெறியும் பொல்லெயும் என்று சும்மாவா சொன்னாங்க ..............
Reply : 0 0
zarjoon Wednesday, 04 January 2012 09:10 PM
சென்ற மாதம் ஆயிரம் கால் மண்டபத்தில் யார் வாருவான் என்று சொன்னீங்க இப்போ அந்த பேச்சு எங்க
அது வெறும் டம்மி பேச்சா ஹீ ............. ஹீ .............ஹீ
சொல்லியது மறந்து போச்சா
Reply : 0 0
zarjoon Wednesday, 04 January 2012 09:09 PM
சென்ற மாதம் ஆயிரம் கால் மண்டபத்தில் யார் வாருவார் என்று சொன்னீங்க இப்போ அந்த பேச்சு எங்க ? அது வெறும் டம்மி பேச்சா ஹீ ............. ஹீ .............ஹீ
சொல்லியது மறந்து போச்சா?
Reply : 0 0
zaro Wednesday, 04 January 2012 09:05 PM
மின்வர் அமைச்சர் உதுமாலெப்பை ஒரு சதமும் வாக்குக்காக செலவு செய்யாமல் சுதந்திர கிழக்கின் அமைச்சர் ஆனார் என்பது தெரியாதா? கட்சி தலைமையின் நம்பிக்கையும் விசுவாசமும் இதுதான்.
சிலர் இன்று பல அமைச்சராக இருக்கலாம் அவர்களின் அரசியல் பிரவேசத்திக்கு எமது அட்டாளைச்சேனை நூறு வீதம் நின்று உளைத்ததையும் மறந்து இந்த கட்டிடம் கட்டி முடிக்க ஏழு வருடங்கள் சென்றதும் ,அவர் எமது ஊரில் கொண்ட அக்கறையை தெளிவு படுத்தியுள்ளது.
Reply : 0 0
senaiyuraan Wednesday, 04 January 2012 08:52 PM
மின்வர் நானும் அதைத்தான் சொல்லுகின்றேன். அக்கரைப்பற்று மக்கள் வாரி வழங்கிய 18000 வாக்குகளினால் கிடைத்த பதவி என்பது உலகமே அறிந்த விடயம். நீங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அந்த வாக்குகளை சிலர்(ந) பெறவேண்டுமானால் பல பில்லியன்களை கொட்ட வேண்டி இருக்கும் ,தலைவர் அஷ்ரப்பின் பாசறையில் வளந்தவர்கள் நாங்கள் (எமது அமைச்சர்) பணம் கொடுத்து வாக்குகள் வாங்க மாட்டோம் !
என்றும் அக்கரைப்பற்று மக்கள் அமைச்சர் உதுமாலெப்பைக்கு கடமைப்பட்டுள்ளார்கள். தே.கா தலைமையின் அத்திவாரம் அட்டாளைச்சேனையும் அமைச்சர் உதுமானும்.
Reply : 0 0
சிறாஜ் Wednesday, 04 January 2012 08:50 PM
அட்டாளைச்சேனையையும் அக்கரைப்பற்றையும் எடுத்து பாருங்கள். அட்டாளைசேனையில் மாடுகள் படுக்கும் கலாச்சார மண்டபம் அக்கரைபற்றில் குதிரை ஏறி இருக்கும் அதாஉல்லா அரங்கம்.
அட்டாளைச்சேனையில் கீரையும் விற்க முடியாத பல் தேவை கட்டிடம். இதே அக்கரைப்பற்றில் பல இலட்சம் வாடகையில் கொமர்ஷல் பேங்க் இருக்கும் கட்டடம் இதுதான் ஊருக்கான சேவையா? அக்கரைப்பற்றில் வெளிச்சம் மற்ற இடம் எல்லாம் இருட்டு இதுதான் க.அ வின் சேவையா இது க.உ. வக்காளத்தா..?
சேவை என்பது ஊருக்குத்தான் வேனும், காட்டுக்க இல்லை
Reply : 0 0
Minwar Wednesday, 04 January 2012 08:11 PM
jpulm அவர்களே, அமைச்சர் காசு கொடுக்காமல் வாக்குப் பெற்றவரா?
அமைச்சருக்கு அட்டாளைச்சேனையில் 1500 வாக்குகள்தான் கிடைத்தன. அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள ஒலுவில், பாலமுனை, ஆலங்குளம், சம்புநகர், அட்டாளைச்சேனை எல்லாம் சேர்த்து 03ஆயிரம் வாக்குகள்தான். மிகுதி அம்பாறை மாவட்டத்தில் கிடைக்கவில்லை. அக்கரைப்பற்றில்தான் கிடைத்தன. புள்ளி விபரம் இருக்கிறது!
Reply : 0 0
ooraan Wednesday, 04 January 2012 07:48 PM
jpulm ! எல்லாத்தையும் அமைச்சர் தூர நோக்கோடுதான் செய்தார் .....
Reply : 0 0
Hamzak Ameen Wednesday, 04 January 2012 06:26 PM
சிராஜ் உங்களுக்கு நன்றி .! உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும். இது அமைச்சருக்கு மட்டும்
Reply : 0 0
senaiyuraan Tuesday, 03 January 2012 04:20 PM
அன்பின் தவிசாளர் அவர்களே
சிலரால் அமைக்கப்பட்ட கட்டிடம் அல்ல அது. அமைச்சர் உதுமாலெப்பையின் முழு முயற்சியால் கட்டப்பட்ட கட்டிடம் என்று சொல்லுவதற்கு வாய் கூசுதா?
முன்னரும் சபை இருந்த இடம் அமைச்சரினால் நெக்டப் திட்டத்தில் அமைத்ததுதானே அதையும் மறக்காதீங்க.
Reply : 0 0
safa Wednesday, 04 January 2012 05:32 PM
இந்த புதிய கட்டடத்திலாவது மக்களுக்கு நியாமான சேவைகள் நடக்குமா???? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Reply : 0 0
jpulm Wednesday, 04 January 2012 03:01 PM
minwar.
சிலர் வாக்குகுகளை கோடி பணம் கொடுத்து வாங்குவார் சிலருக்கு அவரை தேடியே பதவி பட்டங்கள் வரும் அட்டளைசேனையில் அமைச்சருக்கு கிடைத்தது 6000வாக்குகள் அம்பாறை மாவட்டத்தில் மொத்தம் 23000 சொச்சம் வாக்குகளை ஒரு சதமேனும் கொடுக்காமல் பெற்றார் தவிசாளருக்கு 15000/3 புரிந்தால் சரி.
Reply : 0 0
senaiyuraan Wednesday, 04 January 2012 02:51 PM
சிராஜ் அவர்களே நெக்டப் திட்டத்தினால் கட்டப்பட்ட கட்டிடம்தான் உங்க சபை முன்னர் இருந்த இடம்.
இந்த கலாசார மண்டபம். கிழக்கு அபிவிருத்தி அமைச்சின் நிதியினால் ஆரம்பிக்கப்பட்டு தற்போதுதான் 90மூ வேலைகள் நான்கு வருடங்களின் பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில்தான் சபை வந்துள்ளது என்னும் மீதியான வேலைகளும் கட்டிட வடிவமைபுக்களும் உள்ளன தொடர்ந்தும் நடக்கும்.
அப்போதைய பள்ளிவாயல் சமூகம் கேட்டதற்கு இணங்கவே இக்கலாசார மண்டபம் அமைக்கப்பட்டது. இச் சரியான இடம் என்பதை தவிசாளர் சொல்லி இருப்பது விளங்கவில்லையா?
Reply : 0 0
GM Wednesday, 04 January 2012 06:08 AM
சுய இலாபம் தேடுவோர் சுறுசுறுப்பாக இருப்பார்கள் , இது தெரியாத அப்பாவி மக்கள். அவரானாலும் சரி இவரனாலும் சரி , எப்படியோ நல்ல விடயங்கள் நடந்தால் நலமே.
Reply : 0 0
சிராஜ் Wednesday, 04 January 2012 03:33 AM
இதில் கொமண்ட் பண்ணியிருக்கும் சிலருக்கு இதன் வரலாறு தெரியாது. பக்கத்து வீட்டுக்காரனின் மனைவிக்கு பிறந்த பிள்ளைக்கு தன் பெயரை வைக்கச்சொல்லும் கூற்றுத்தான். இது ஏன்னா இது நெக்டப் மூலம் உலக வங்கி நிதியினை எடுத்து கட்டியதுதான் இது.
ஆனால் இது பள்ளிக்கு முன்னால் கலாச்சார மண்டபம் ஒன்று தேவையா என்னும் சிந்தனை இல்லாமல் கட்டிய க.உ.க்கும் க.அ. என்ன சொல்ல,
ஆனால் இதனை அழகு படுத்த எடுத்த முடிவுதான் இது என்பதனை புரிந்து கொள்ளவும் தவிசாளருக்கு நன்றி.
Reply : 0 0
Nawas Wednesday, 04 January 2012 02:52 AM
jpulm அவர்களே... பிரதேச சபையை மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடத்துக்கு இடமாற்றம் செய்ததுக்காக தவிசாளருக்கு நன்றி என்று எழுதியிருக்கிறீங்க!
இதே சனமாட்டம் கூடிய இடத்தில் சந்தைக் கட்டிடம் அமைப்பதற்கு தவிசாளர் எடுக்கும் முயற்சிகளை, உங்க அமைச்சர் தடுக்கிறாரே. இது என்ன நியாயம் வாப்பா?
ஊருக்கு எண்டு உங்கட அமைச்சர்மார் கட்டுற எந்தக் கட்டிடமும் உருப்படியா இல்ல என்பதையும் உங்களுக்கு ஞாபகப்படுத்துறன்...
Reply : 0 0
Minwar Wednesday, 04 January 2012 01:32 AM
சேனையுரான், கட்டிடம் அமைத்தவர்களின் பெயரை தவிசாளர் சொல்லாமல் விட்டது - அரசியல் நாகரீகம் கருதி என்பது கூடவா உங்களுக்கு விளங்கல.
அட்டாளைச்சேனையில் தவிசாளர் கிட்டத்தட்ட 10 ஆயிரம் விருப்பு வாக்கு எடு்த்தவர். மாகாண அமைச்சரோ 1500வாக்குகள் மட்டுமே எடுத்தவர்.
ஊரின் நல்லது கெட்டதுகளை தவிசாளர் பார்த்துக் கொள்வார்!
Reply : 0 0
Nawas Wednesday, 04 January 2012 01:25 AM
மக்காள், சந்தைக்கு நடுவில கலாசார மண்டபம் என்கிற பெயரில கட்டப்பட்ட அந்தக் கட்டிடத்துல மாடுகளும், நாய்களும்தான் படுத்துக் கிடந்தன. இதுதான் தூர நோக்குச் சிந்தனையாகும்.
கட்டிடங்கள் அமைப்பது ஒன்றும் சீன வித்தையல்ல. ஆனால், அதை எங்கே, எப்படி அமைக்கனும் என்பதுதான் முக்கியம். ஆனால் அந்த முக்கியமான விடயங்களை மறந்து விட்டு, தாங்கள் கொந்தராத்துச் செய்வதற்காக, கண்ட கண்ட இடங்களில் கட்டிடம் அமைப்பதெல்லாம் ஒரு விசயமே இல்ல மக்காள்.
Reply : 0 0
zarjoon Tuesday, 03 January 2012 10:42 PM
சேனையுரான்
தவிசாளர் இனி வரும் காலங்களில் அதை வாசித்து சரியாக சொல்லுவார் கவலைபடாதீங்க(அந்த நேரம் தவிசாளரும் அவங்க பார்ட்டிதான் ) எல்லாவற்றிக்கும் காலம் நேரம் வரனும் வந்தால் சரியாக சொல்லுவார் தவிசாளர் சொல்லாமல் சிலர்(ம) சேர்த்தும் இருக்கலாம் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.
குழப்பத்தை உண்டு பண்ணுவதே சிலரின் தொழில். மக்களாகிய நாங்கள் தெளிவாக இருக்க வேண்டும்.
Reply : 0 0
hameeduvais Tuesday, 03 January 2012 10:33 PM
உண்மையை சொல்ல மன சாட்சி தடுக்கிறது போலும். பாவம்.
Reply : 0 0
zarjoon Tuesday, 03 January 2012 10:10 PM
senaiyuaraan தவிசாளர் என்றும் கட்சிக்கு அப்பாலும் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர். சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்கும் ஆளுமை கொண்டவர்.
அதனால்தான் ஊரின் எல்லையில் இருந்த சபையை சன நடமாட்டம் கூடிய இடத்திற்கு மாற்றியுள்ளார் .
தவிசாளர் அவர்களே!
அழகான கட்டிடத்தில் புதிய வருடத்தை ஆரம்பம் செய்துள்ளீர்கள். அந்த அழகை வெளிப்படுத்த கட்டிடத்தின் முன்னாள் உள்ள மாட்டுக் கொட்டிலை அகற்ற நடவடிக்கை எடுங்கள். எமது ஊரின் அழகிய தூபியோடு சேர்ந்த பிரதேசசபையையும் கற்பனை செய்து பாருங்க சேர்.
Reply : 0 0
jpulm Tuesday, 03 January 2012 09:44 PM
தங்களின் கட்சியால் கட்டிடம் கட்ட முடியாட்டி சும்மா இருக்குறதானே அதைவிட்டுப்போட்டு வீரப்பேச்சு நமக்கு எதற்கு! செய்யவும் விடமாட்டிங்க செய்தாலும் பிழை என்றால் ?????????
கட்டிடத்தினால் பள்ளிவாயலுக்கு வருமானம் கிடைக்க வேண்டும் என்ற அவரின்(அ) கனவு பலிக்குது. பரவாயில்ல சபையை மக்கள் நடமாட்டம் கூடிய இடத்திற்கு மாற்றியமைக்கு நன்றிகள் உரித்தாகட்டும்.
Reply : 0 0
senaiyuraan Tuesday, 03 January 2012 09:29 PM
கட்டிடம் அமைக்கும் போது எங்க தவிசாளர் வெளிநாட்டில் இருந்ததால் அவருக்கு யார் கட்டிய கட்டிடம் என்பது தெரியாமல் போனது நியாயம்தான். இருந்தும் யாரால் கட்டி திறக்கப்பட்டது என்று மும்மொழிகளிலும் அக்கட்டிடத்தில் பொறிக்கப்பட்டதை கூட வாசித்து பார்க்காமல் விட்டதை வாக்களித்தவன் என்ற வகையில் வெட்கப்படுகின்றேன்
Reply : 0 0
saro Tuesday, 03 January 2012 07:28 PM
karaiyaan kudu kadde karunaakam kudiyikkum kathaiya poaal ungka kathai amainthullathu yaaroo kaddiya kaddidaththil neengka poay alaku paduththuwathaa??????????
emathu katsiyaal kaddidam ondu amaiththu athile kudi erukkelaame
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
15 minute ago
1 hours ago