Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Suganthini Ratnam / 2012 ஜனவரி 03 , மு.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சும் மாகாண கல்வித் திணைக்களமும் இணைந்து கிழக்கு மாகாணப் பாடசாலை மாணவர்களிடையே டெங்கொழிப்புத் தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்வுள்ளதாக கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.ஏ.போல் தெரிவித்தார்.
இவ் வேலைத்திட்டத்தை பாடசாலைகளில் முறையாக அமுல்படுத்துவதற்காக ஆசிரியர்களுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு பயிற்சியளிக்கவுள்ளது. இதன்படி 1028 ஆசிரியர்களுக்கு டெங்கொழிப்புத் தொடர்பான பயிற்சி வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
டெங்குநோய்த் தாக்கம் தற்போது தேசிய தொற்றுநோயாக மாறியுள்ளது. பாடசாலை மாணவர்களை இந்த நோய்த் தாக்கத்திலிருந்து காப்பாற்றும் நோக்கில் இவ்வேலைத்திட்டம் பாடசாலை மட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதேவேளை, டெங்குநோய்த் தாக்கத்திற்குள்ளாகி கடந்த வருடம் 165 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 2,625 பேர் நோய்த்தொற்றுக்குள்ளாகியுள்ளதாக டெங்கொழிப்பு பணியகம் தெரிவித்திருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
24 minute ago
2 hours ago