2025 ஜூன் 25, புதன்கிழமை

சர்வதேச லயன்ஸ் கழகத்தின் கல்முனை நகரக் கிளையின் ஒன்றுகூடல்

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 03 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

சர்வதேச லயன்ஸ் கழகத்தின் கல்முனை நகரக் கிளையின் வருடாந்த ஒன்றுகூடலும் புதிய அங்கத்தவர் பதவிப்பிரமாண நிகழ்வு மற்றும் கௌரவிப்பு நிகழ்வும் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேசசபைத் தவிசாளர் ஏ.எல்.எம்.நஸீர் லயன்ஸ் கழகத்தின் புதிய உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ராமகிருஷ்ணன் நீண்டகால சேவையின் பின்னர் ஓய்வுபெறுவதையிட்டு கல்முனை நகர லயன்ஸ் கழகத்தினால் அவர்  பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.

காரைதீவில் கழகத் தலைவர் லயன் கே.பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளில் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ராமகிருஷ்ணன் விசேட அதிதியாக கலந்து கொண்டார். லயன்ஸ் கழகத்தின் மாவட்ட ஆளுநர், சபையின் பிரதிப் பொருளாளர் லயன் சிவகுரு சண்முகநாதன், வலய தலைவர் லயன் எஸ்.தைரியராஜா, கழகத்தின் திட்ட தலைவர் பி;ரதேச செயலாளர் கலாநிதி எம்.போலரத்தினம்,  கழகத்தின் உறுப்பினர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .