2025 ஜூன் 25, புதன்கிழமை

பாதிக்கப்படட மருதமுனை மக்களுக்கு மு.கா. தலைமை தீர்வுகளை பெற்றுக்கொடுவில்லை: மாநகர சபை உறுப்பினர்

Super User   / 2012 ஜனவரி 04 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

சுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப்படட மருதமுனை மக்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை தீர்வுகளை பெற்றுக்கொடுக்காது மௌனம் காக்கிறது என அக்கட்சியின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.அமீர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சுனாமி அனர்த்தத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இன்று வரை எந்தவித வீடுகளுமின்றி கஷ்டப்படும் மருதமுனை மக்களின் பிரச்சினைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை தீர்வுகளை பெற்றுக்கொடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று புதன்கிழமை அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சுனாமி அனர்த்தம் இடம்பெற்று கடந்த 7 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளன. இம்மக்களின் வேதனைகள் குறித்து சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளோ அல்லது அதிகாரிகளோ கண்டுகொள்ளாதுள்ளமையை நான் கண்டிக்கின்றேன்.

மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப்பினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டதன் நோக்கம். முஸ்லிம் சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றுவதேயாகும்.

இதற்காக தலைவர் அஷ்ரப் 1994ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிகா குமாரத்துங்கவின் அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை இணைத்து,  சமூகத்திற்காக பெரும் அபிவிருத்திகளையும் நலன்களையும் சாதுரியமாக நிறைவேற்றினார்.

இன்றைய நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசின் பங்காளியாக இருக்கின்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் கூட்டு சேர்ந்ததன் நோக்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மாகாண சபை உறுப்பினர்களையும் பாதுகாத்து கொள்வதற்காகவே தவிர மக்களுக்கு நன்மைகள் கிடைப்பதற்காக அல்ல.

சுனாமி அனர்த்தத்தில்; அதிகளவான உயிர்களையும் உடைமைகளையும் இழந்து அழிவுகளை சந்தித்துள்ள அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் குறிப்பாக கல்முனை தொகுதி மக்களின் வேதனைகளை கருத்திற் கொண்டு அரசுடன் பேசி மக்களுக்கு நன்மைகளை பெற்றுத்தராமல், வெறுமனே வெளிநாட்டு இராஜதந்;திரிகளை சந்தித்து ஊடகங்களில் பிரபல்யத்தை பெறுவதால் எமது மக்கள் அடைந்த நன்மைகள் எதுவுமில்லை.

எனவே மக்களின் நலன் கருதி கிழக்கு மாகாணத்திலுள்ள ஏனைய முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் தங்களது பிரதேச மக்களுக்கு செய்து வருகின்ற நன்மைகளில் குறிப்பிட்டளவையாவது சுனாமியினால் பாதிக்கப்பட்ட மருதமுனையிலுள்ள குடும்பங்களுக்கு முடியுமான உதவிகளையும் பெற்றுத்தருமாறு பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கின்றேன்.


You May Also Like

  Comments - 0

  • USM Wednesday, 04 January 2012 09:41 PM

    ஏ.ஆர்.அமீர்இ இது உங்க வெட்டிப் பேச்சு என்று நினைக்குறேன்... ஏனென்றால் 20 வருஷத்துக்குமுன் வடக்கில் புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம் சமூகத்தை மீள்குடியேற்ற ஒரு திடமான நடவடிக்கை எடுக்க திட்டம் வக்கக வக்கில்லாத உங்க தலைமைத்துவம், கட்சி, நேற்று முந்தநாள் நடந்த சுனாமி மக்களை கணக்கெடுக்க இன்னும் எவ்வளவு காலம்தான் தேவைப்படுமோ உங்க இந்த காங்கிரஸ் கட்சிக்கும் தலைமைக்கும்....

    Reply : 0       0

    ar Wednesday, 04 January 2012 10:36 PM

    கொள்கைக்காக உருவாக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட கட்சி...... இன்று கொள்கை என்றால் என்னவென்று தெரியதவர்களை எல்லாம் உருவாக்கி விட்டு படும் அவஸ்தை ! சொந்த போக்கேட்டை நிரப்புவதட்க்காக மக்களை பயன்படுத்தும் அரசியல் வாதிகளை புறந்தள்ளி கொள்கைக்காய் வாழ்பவர்களை உருவாக்க மக்கள் இனியாவது முயற்சிப்பார்களா?

    Reply : 0       0

    MEENAVAN Wednesday, 04 January 2012 11:47 PM

    இவை யாவும் தெரிந்து கொண்டுதானே அக் கட்சியுடாக உறுப்பினர் ஆகி உள்ளதை மறக்க வேண்டாம்.

    Reply : 0       0

    janoovar Thursday, 05 January 2012 06:55 PM

    முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் மருதமுனைக்கு மட்டுமல்ல இச்சமூகத்துக்குத்தான் என்ன செய்திருக்கின்றது? என்றாலும் மரத்துக்குத்தானே வாக்களிக்கின்றீர்கள்.

    Reply : 0       0

    Nallawen Friday, 06 January 2012 11:12 PM

    என்ர அழகு வாப்பா நீங்க சொல்றது எல்லாம் சரியாதான். ஹகீம் தலைவர் ஆகி இப்ப பன்னிரெண்டு வருசம் ஆச்சி. நமக்கு என்ன வாப்பா செய்திருக்காரு. நம்முட சனத்திக்கிட்ட திரும்ப வருவர். நம்முட மட்டக்களப்பு சனம்(கிழக்கு மாகாணம்) திரும்பவும் வோட்டு போடுவம். நாம தானே ரோசம் பறந்தவர்கள். அது அவருக்கு நல்லா தெரியும். ஆனா ஒன்னு அவருல தப்பு இல்ல. ”அவரு மீண்டும் வருவாரு நாம மீண்டும் மந்தைகளாவோம்” நாம தானே மந்தைக் கூட்டம்

    Reply : 0       0

    sollave ille Saturday, 07 January 2012 11:03 AM

    மதிப்புக்குரிய அமீர் நீங்கள் சொல்வதை பார்த்தால்ல் கட்சி மாற போறிங்க போல தெரியுது ..................ம்ம்ம்ம் ஆகட்டும்

    Reply : 0       0

    m.hussain Sunday, 08 January 2012 04:55 PM

    தம்பி அமீர் நீங்க பயப்படவேண்டாம். அல்லாஹ் உங்களுடன் இருக்கின்றான். உண்மையை ஒருபோதும் யாராலும் மறைக்க முடியாது. தைரியமா அரசியல செய்ய ரெடி ஆகுங்கோ.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .