Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Suganthini Ratnam / 2012 ஜனவரி 05 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான – ஒலுவில் பகுதியிலுள்ள காணித் துண்டுகளை மோசடியான ஆவணங்கள் மூலம் அடிமட்ட விலையில் கையகப்படுத்திக் கொண்டனரென்ற குற்றச்சாட்டில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த சில உத்தியோகத்தர்கள் மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அம்பாறை காரியாலயத்தின் இரு அலுவலர்களுக்கு எதிராக ஜனாதிபதி புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் களியோடை தோட்டப் பகுதியிலுள்ள – காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான 21 ஏக்கர் பரப்பளவுள்ள காணியில் 06 ஏக்கர் 02 றூட் அளவான காணித்துண்டுகளே மோசடியாக கையகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
மேற்படி காணியானது தற்போது ஏக்கரொன்று 60 இலட்சம் ரூபாய் பெறுமதியாகவுள்ள நிலையில், அதனை ஒரு இலட்சத்து 60 ஆயிரம் ரூபாவுக்குட்பட்ட தொகையைச்;; செலுத்தி இவர்கள் கையகப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், காணியினை உரிமைப்படுத்துவதற்காக மோசடி ஆவணங்களைத் தயாரித்து வழங்கியுள்ளதாகவும் அறிய முடிகிறது.
இந்த வகையில் மொத்தமாக 03 கோடியே 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான காணித்துண்டுகளைக் கையகப்படுத்திக் கொள்வதற்காக 07 இலட்சத்து 32 ஆயிரம் ரூபாவை மட்டும் மேற்படி நபர்கள் அரசாங்கத்துக்குச் செலுத்தியுள்ளனர்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்டக் காரியாலய அலுவலர்கள் அடங்கலாக மொத்தம் 22 பேர் மேற்படி காணித்துண்டுகளை இவ்வாறு மோசடியாகக் கையகப்படுத்தியுள்ளனரெனக் கூறப்படுகிறது.
இவ் விடயம் தொடர்பில் ஜனாதிபதி புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் - அட்டாளைச்சேனை, கல்முனை, சம்மாந்துறை மற்றும் நாவிதன்வெளி பிரதேச செயலகங்களில் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்னர் காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் அம்பாறை அலுவலகம் உடைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றுவரும் மேற்படி காணிகள் தொடர்பிலான ஆவணங்கள் உள்ளிட்ட பல கோப்புகள் அண்மையில் களவாளப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, காணிக் கட்டளைச் சட்டத்தின் கீழ், வாங்கவோ – விற்கவோ அனுமதியில்லாத சில காணிகளை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் பொதுமகனொருவரிடமிருந்து விலையாகப் பெற்றுக் கொண்டதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக் குறித்தும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் சில தளபாடங்களை அங்குள்ள சில உத்தியோகத்தர்கள் அடிமட்ட விலையில் சொந்தமாக்கிக் கொண்டார்களென்ற குற்றச்சாட்டுத் தொடர்பாகவும் ஜனாதிபதி புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அறியமுடிகிறது.
meenavan Thursday, 05 January 2012 09:02 PM
இதே போன்ற அரச காணிகளை கையகபடுத்தும் நிலைமை நாட்டின் கடற்கரையை அண்டிய பகுதிகளில் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது, உல்லாச பிரயானிகளை முன்னிறுத்தியே இந்நிகழ்வுகள் நடைபெறுகின்றது. இவ்விடயத்தில் அரசு கூடிய சிரத்தை எடுக்க வேண்டும்.
Reply : 0 0
zimar Friday, 06 January 2012 12:45 AM
நல்ல செய்திககளை பிரசுரிக்க வாழ்த்துக்கள்.
Reply : 0 0
janoovar Friday, 06 January 2012 05:02 AM
தப்பு செய்தது யாராயினும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும்
Reply : 0 0
Minwar Monday, 09 January 2012 09:45 PM
ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து, இப்போ அரசாங்கச் சொத்தில் கை வைத்திருக்கிறார்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
17 minute ago
1 hours ago