2025 ஜூன் 25, புதன்கிழமை

அமைச்சர் ஜோன் செனவிரத்ன அக்கரைப்பற்று ரஜமஹா விகாரைக்கு விஜயம்

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 08 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேனவின் அழைப்பின் பேரில் அக்கரைப்பற்று ரஜமஹா விகாரைக்கு  பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் டபிள்யூ.எம்.ஜோன் செனவிரத்ன நேற்று சனிக்கிழமை விஜயம் செய்துள்ளார்.

இதன்போது கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தனியான கணக்குப்பிரிவை ஆரம்பிக்குமாறு பீ.எச்.பியசேன விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர், கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தனியாக இயங்கச் செய்வதற்கான துரித நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்தார்.

பிரதேச செயலாளர் வீ.லவநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் பியசேனவின் இணைப்பாளர்களான எஸ்.தீபன், எம்.ஐ.எம்.றியாஸ், அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • moulana Wednesday, 11 January 2012 09:43 PM

    நல்ல முயற்சி நடந்தால் சரி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .