2025 ஜூன் 25, புதன்கிழமை

சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான முதற்கட்ட பயிற்சிச் செயலமர்வு

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 08 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

அம்பாறை மாவட்டத்தின் தமிழ்மொழிமூல முதலாவது தொகுதி சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள், உதவி முகாமையாளர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கான முதற்கட்ட பயிற்சிச் செயலமர்வு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

சமுர்த்தி வங்கிகளை கணினிமயப்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் தற்போது நாடாளாவிய ரீதியில்  நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே அம்பாறை மாவட்டத்தின் சமுர்த்தி வங்கி பணியாளர்களுக்கான முதற்கட்ட செயலமர்வு நடத்தப்பட்டது.

அம்பாறை மாவட்டத்தின் சமுர்த்தி முகாமையாளர் ரீ.கே.றகுமத்துல்ல தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில்; அம்பாறை மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ஐ.அலியார், அஸ்வீன் கணினி மென்பொருள் நிறுவனத்தின் முகாமையாளர், வளவாளர்களான ஈ.சுகுமார், இப்றாஹீம், எம்.மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .