2025 ஜூன் 25, புதன்கிழமை

பொத்துவில் வைத்தியசாலையில் நிரந்தர விசேட வைத்திய நிபுணர்கள் இன்மையால் பொதுமக்கள் சிரமம்

Menaka Mookandi   / 2012 ஜனவரி 09 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் நிரந்தர விசேட வைத்திய நிபுணர்கள் இன்மையால் நோயாளர்கள் கடுஇமான அசௌகரியங்களை முகம்கொள்வதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இதேவேளை, இவ்வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைப் பிரிவு நிர்மாணிக்கப்பட்டுள்ள போதும் இதுவரை அப்பிரிவு இயங்கத் தொடங்கவில்லை எனவும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது, 'பொத்துவில் ஆதார வைத்தியசாலையானது பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வருகின்றது. இங்கு சத்திர சிகிச்சைக்கூடம், சத்திர சிகிச்சைப் பிரிவு, அவசர சிசிச்சைப் பிரிவு போன்றவை நிர்மாணிக்கப்பட்டுள்ள போதும் அவை இதுவரை இயங்கத் தொடங்கவில்லை என்பது பெருங்குறையாகும்.

அதேவேளை, இவ்வைத்தியசாலைக்கென விசேட வைத்திய நிபுணர்கள் எவரும் இதுவரை நியமிக்கப்படவில்லை. இதனால், அக்கரைப்பற்று மற்றும் சம்மாந்துறை ஆகிய வைத்தியசாலைகளிலிருந்து வாரத்துக்கொரு தடைவை மட்டுமே வைத்திய நிபுணர்கள் பொத்துவில்ஆதார வைத்தியசாலைக்கு வந்து செல்கின்றனர். இதனால், நோயாளர்கள் கடும் சிரமத்தினை எதிர்கொள்வதாகக் கூறப்படுகிறது.

மேலும், இவ்வைத்தியசாலையில் பிணவறையொன்று இதுவரை நிர்மாணிக்கப்படவில்லை என்பது பாரியதொரு குறைபாடகும். அதேவேளை, இங்கு சட்ட வைத்திய அதிகாரியொருவர் நியமிக்கப் படாமையால், பிரேத பரிசோதனைகளுக்காக இங்கிருந்து 50, 100 கிலோமீற்றர் தூரமுள்ள அக்கரைப்பற்று, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை போன்ற இடங்களிலுள்ள வைத்தியசாலைக்கு பிரேதங்களைக் கொண்டு செல்ல வேண்டிய நிலையுள்ளதைச் சுட்டிக் காட்டும் பொதுமக்கள், இது குறித்து தமது கவலைகளையும் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் ஆளனிப் பற்றாக்குறை நிலவுவதும் குறிப்பிடத்தக்கது. எனவே, மேற்படி குறைபாடுகளை நிவர்த்தி செய்து பொத்துவில் ஆதார வைத்தியசாலையினை சிறந்த முறையில் செயற்படுத்துவதற்கு உரிய அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0

  • ar Tuesday, 10 January 2012 02:03 AM

    விசேட வைத்தியர்கள் வருவது இரு வாரங்களுக்கு ஒரு முறை மாத்திரம். அதுவும் இரண்டு பேர் மாத்திரமே. மக்களின் ஒற்றுமை இன்மையும் அரசியல் செல்வாக்கு இன்மையும்இ உயர் அரசாங்க அதிகாரிகளின் தட்டிகழிப்பும் உரிய தேவைகள் சரியான நேரத்தில் முன்வைக்கப்படமையுமே இந்த அவலத்திற்கு காரணம்! பத்து பதினைந்து கி.மீ. இடைவெளி உள்ள ஊர்களுக்கு விசேட நிபுணர்கள் நியமிக்கப்படலாம் என்றால், ஐம்பது கி மி அப்பால் உள்ள ஊருக்கு ஏன் நியமிக்க முடியாது?

    Reply : 0       0

    senaiyuraan Tuesday, 10 January 2012 04:52 AM

    பொத்துவிலின் அரசியல் தலைவர்கள் துங்குகின்றார்களா ??
    தனது வீட்டை அழகு பார்க்காமல் தேர்தலுக்கான 'மனாப்பை' தேடும் விடயத்தில் அக்கறை காட்டி அயல் ஊரின் தேவைகளை கேட்டறிகின்றனர்,
    இதற்குத்தான் சமுக அக்கறை கொண்டவர்கள் மக்கள் பிரதிநிதியாக வேண்டும்.

    Reply : 0       0

    senaiyuraan Tuesday, 10 January 2012 05:00 AM

    பொத்துவில் மக்கள் வாக்குப்போட்ட கட்சியின் தலைவரும் அரசின் பங்காளிதனே அவரோடு பேசிதீர்த்து இருக்கலாம்.

    Reply : 0       0

    najath Saturday, 14 January 2012 03:28 AM

    சில இடங்களில் கட்டிடம் இருக்கு, நிபுணர்கள் இல்லை
    சில இடங்களில் நிபுணர்கள் உண்டு , சரியான கட்டிடம் இல்லை, இதுதான் இலங்கை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .